இலங்கை பெண்களை சட்டவிரோத தொழிலில் ஈடுபடுத்தும் நபர்கள்! ரணில் விடுத்த உத்தரவு
Ranil Wickremesinghe
Sri Lanka
Sri Lankan Peoples
By pavan
இலங்கை பெண்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் நபர்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவுக்கு இணங்க, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கண்டறிய விசாரணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்கள், தூதரக பிரிவின் அதிகாரிகள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள், குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளை அடையாளம் கண்டு சட்ட நடவடிக்கை எடுப்பது இதன் நோக்கம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஓமானில் இடம்பெற்ற சம்பவம்
அதேவேளை, ஓமானில் பாதுகாப்பான வீடொன்றில் பாதிக்கப்பட்ட 41 பெண்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதுடன் இவர்களில் 9 பெண்கள் சுயநினைவு இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்