உலக சமாதானத்திற்காக போராடுபவர்களுக்கு ஈழத்தமிழ் பெண் விடுத்த அறைகூவல்
பயங்கர ஆயுதங்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதை உலக நாடுகள் தவிர்க்க வேண்டுமென ஈழத்தமிழ் பெண் சூசைப்பிள்ளை மேரி அன் (Soosaipillai Mary Anne) வலியுறுத்தியுள்ளார்.
உலக சமாதானத்துக்காக போராடும் தரப்பினர், இந்த நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்பாக மூன்று நாள் அறவழிப் போரட்டத்தில் ஈடுபட்டு வரும் சூசைப்பிள்ளை மேரி அன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நான் எந்த ஒரு அமைப்பிலும் இல்லை. சாதி, மத, இன,மொழி வேறுபாடின்றி ஒட்டு மொத்த மனித குலமும் பாதுகாக்கப்பட வேண்டும்.

மனித படுகொலை
மனிதாபிமானம் மரணித்து போக கூடாது என்ற காரணத்திற்காகவும், மனித படுகொலைகளையும், பயங்கர ஆயுதங்கள் மனிதர்கள் மேல் பிரயோகிக்கபபடுவதை தவிர்க்கும் முகமாகவும் இந்த அற வழி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளேன்.
தொழில்நுட்ப வளர்ச்சியால், நிலவுக்கே சென்று வந்தாலும், மனிதாபிமானமே இல்லாமல் போய்விட்டது. நாம் ஒவ்வொரு வருடமும் ஹிரோசிமா சென்று இரங்கல்களை தெரிவித்து வருகின்றோம். ஆனால் மீண்டும் நாம் அதையே செய்கின்றோம்.
நாம் இன்று வரையும் உலக சமாதானத்திற்காக போராடுகின்றோம்.

பயங்கர ஆயுத பயன்பாடு
ஆனால், உலக சமாதானம் எப்போது உருவாகுமென்றால் எங்களிடம் இருந்து பயம் இல்லாமல் போகும் போது, அந்த பயம் எப்போது போகுமெனில், பயங்கர ஆயுத பயன்பாடு நிறுத்தப்படும் போது, 2 வருடங்களுக்கு எவ்வித விதி விலக்குமின்றி பயங்கர ஆயுதங்களின் ஏற்றுமதி, இறக்குமதி செய்வதை உலக நாடுகள் தவிர்க்க வேண்டுமென ஐ.நா விற்கு கோரிக்கை விடுக்கின்றேன்.
நாடு விட்டு நாடு வந்து அகதிகளாக இருக்கும் எங்களை சுதந்திரமாக வாழ விடுங்கள். இதனை ஐ.நாவும் உலக நாடுகளின் தலைவர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்“ என தெரிவித்தார்.
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல… 22 நிமிடங்கள் முன்