படகுகவிழ்ந்து மாணவர்கள் உயிரிழந்த விவகாரம்! ஊடகவியலாளரை மிரட்டிய போராட்டக்காரர்கள் (காணொளி)
திருகோணமலை - கிண்ணியா பகுதியில் இழுவைப்படகொன்று கவிழ்ந்ததில் ஆறு பேர் உயிரிழந்துள்ள சம்பவத்தை அடுத்து கிண்ணியா நகரமே பெரும் களேபர பூமியாக மாறியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை - கிண்ணியா - குறிஞ்சாக்கேணிப் பால நிர்மாண வேலைகள் நடப்பதால், தற்காலிகமாக சேவையில் ஈடுபட்ட மோட்டார் இழுவைப் படகு உடைந்து, கவிழ்ந்ததில் பலர் நீரில் மூழ்கி மாணவர்கள் உட்பட ஆறுபேர் உயிரிழந்துள்ளனர்.
இதனை அடுத்து பொதுமக்கள் பல பக்களிலும் போராட்டாங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்பு மக்களின் ஆர்ப்பாட்டத்தினை காணொளி எடுக்கச் சென்ற ஊடகவியலாளர் ஒருவரின் கைத்தொலைபேசியினை ஆர்ப்பாடக்காரர்கள் பறித்துச் சென்றுள்ளனர். இது தொடர்பில் கிண்ணிய காவல்துறையினரிடம் முறைப்படு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
இதில் பயணம் செய்த 20 மாணவர்களில் ஆறு பேர் உட்பட எழுவர் உயிரிந்தனர்.
இதனை அடுத்து மக்கள் கடைகளை மூடி பொது துக்க தினமாக அனுஷ்டிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு அமைதியின்மையும் ஏற்பட்டுள்ளது.
அமைதி நிலையை பேணும் வகையில் வீதிகள் எங்கும் பெருமளவு இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.