பௌத்த தர்மத்தை பாதுகாப்பது இனவாதம் அல்ல: நாமல் இடித்துரைப்பு
பௌத்த தர்மம், பௌத்த சாசனம் மற்றும் மகாசங்கத்தை பாதுகாப்பது இனவாத செயல் அல்ல என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்ட போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அதன்போது, இலங்கையில் பெரும்பான்மையான மக்கள் பௌத்த மதத்தவர்கள் என்பதால், புத்த மத கலாசாரம் மற்றும் தத்துவத்தை பாதுகாப்பது நாட்டிலுள்ள அனைத்து மதங்களுக்கும் நன்மை பயக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
கலாசார பாதுகாப்பு
இந்த நாடு பௌத்த மத அடித்தளத்தில் உருவானது என தான் நம்புவுதாகவும், பௌத்த மதத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாடு, அனைத்து மதங்களையும் பாதுகாக்க முடியும் எனவும் நாமல் வலியுறுத்தியுள்ளார்.

“நாம் அதற்காக அஞ்சுவதில்லை. நான் ஒரு சிங்கள பௌத்தன், அதே சமயம் பிற கலாசாரங்களையும் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன்.
என் மதத்தில் நம்பிக்கை வைத்திருப்பதாலேயே என் கலாசாரத்தை பாதுகாக்க முடிந்தது. மதத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள், மற்றொருவரின் மொழி, மதம் அல்லது கலாசாரத்தை பாதுகாக்க முடியாது,” என்றும் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |