அரச வங்கி ஏ. ரி.எம் இல் பாரிய கொள்ளை
குருநாகலில் உள்ள அரச வங்கியொன்றின் ஏ. ரி.எம் இயந்திரத்தில் இருந்து 10 மில்லியன் ரூபாவை கொள்ளையிட்ட 33 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதாகக் கூறி ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த பணத்தை சந்தேகநபர் திருடிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கொள்ளையின் பின்னர் தலைமறைவு

சந்தேகநபர் கடந்த பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி குருநாகல் கெட்டுவான சந்திக்கு அருகில் அமைந்துள்ள ஏ. ரி.எம்இயந்திரத்தில் கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்டுள்ளார்.
கொள்ளைச் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது எப்பாவல பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளைச் சம்பவத்தைத் தொடர்ந்து சந்தேகநபர் பிங்கிரிய, ஒருதென்ன பிரதேசத்தில் தலைமறைவாக இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
திருடப்பட்ட பணத்தில் வாங்கிய பொருட்கள்

திருடப்பட்ட பணத்தில் இருந்து ரூபா4.56 மில்லியன் ரொக்கம், சந்தேக நபர் ரூபா 650,000, பெறுமதியில் வாங்கிய ஒரு வளையல் மற்றும் மோதிரம், ஒரு மோட்டார் சைக்கிள் ரூ. 550,000 மற்றும் ஐபோன் மதிப்பு ரூ. 350,000. ஆகியவற்றையும் காவல்துறையினர்,கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, மின்னேரிய இராணுவ முகாமிற்கு முன்பாக உள்ள ஏ. ரி.எம் இயந்திரத்தில் பணம் திருடியதுடன், பிங்கிரிய மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள இரண்டு ஏ.டி.எம் இயந்திரங்களில் இருந்தும் பணத்தை திருட முயற்சித்துள்ளார்.