யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய தெருவோர உணவகங்களுக்கு எதிராக நடவடிக்கை
யாழ்ப்பாணம் (Jaffna) திருநெல்வேலியில் பொது சுகாதார பரிசோதகர் (Public Health Inspector) குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, உணவக உரிமையாளர்கள் மூவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கு, யாழ். மேலதிக நீதவான் நீதிமன்றில் பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் நேற்றையதினம் (10.06.2024) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடும் எச்சரிக்கை
இதன்போது மருத்துவ சான்றிதழ் இன்றி உணவை கையாண்டமை, தனிநபர் சுகாதாரம் இன்றி உணவை கையாண்டமை போன்ற அடிப்படையான சுகாதார வசதிகள் கூட இல்லாமல் உணவு தயாரித்தமையினால் மேற்படி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்குகளை நேற்றைய தினமே விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மேலதிக நீதவான் செ. லெனின்குமார் மூன்று வியாபார உரிமையாளர்களுக்கும் மொத்தமாக 35,000 ரூபா தண்டப் பணம் அறவிட்டதுடன் கடும் எச்சரிக்கையும் வழங்கினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![Gallery](https://cdn.ibcstack.com/article/03b1729d-fcef-4e19-9822-e35f4f6c3fce/24-666893c719936.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/6bd6cee5-f688-4187-8c32-484c184c2fba/24-666893c789ea1.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/5f810b9b-5d32-4c98-b8ed-602df9b12c83/24-666893c814172.webp)
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…](https://cdn.ibcstack.com/article/8170aadf-e519-44c1-8849-b5aa88b7da2a/24-66736d16968e6-md.webp)
அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்… 3 நாட்கள் முன்
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)
இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….
1 வாரம் முன்![கல்வி ஆயுதம் தான் தமிழினத்தை மீள் எழுச்சி கொள்ளச் செய்யும்…](https://cdn.ibcstack.com/article/be32300b-7292-4007-95f8-41795e7a8c3f/24-6662705be1451-sm.webp)