வெளிநாடொன்றில் பாரிய நிலநடுக்கம்! விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை
Tsunami
Earthquake
World
By Dhilak
பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ பகுதியில் ரிக்டர் அளவில் 7.8 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இதனை ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் பூமியிலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் (6.2 மைல்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.
சுனாமி எச்சரிக்கை
முன்னதாக இந்த நிலநடுக்கத்தின் தீவிரத்தை ரிக்டர் அளவில் 7.3 ஆகக் கணித்திருந்த GFZ, பின்னர் அதனை 7.8 ஆக உயர்த்தியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்