கனடாவைத் தொடர்ந்து நியூஸிலாந்திலும் வெடித்தது போராட்டம் (photos)
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் கடுமையான விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்டதை கண்டித்து நியூசிலாந்திலும் பாரவூர்தி சாரதிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கனடாவில் எல்லை கடந்து செல்லும் பாரவூர்தி சாரதிகள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்த நாட்டின் தலைநகர் ஒட்டோவாவில் பாரவூர்திகளுடன் சாரதிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தால் ஒட்டோவாவில் அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த கடுமையான விதிமுறைகளை நடைமுறைப்படுத்திய நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்று. கொரோனா தொற்று அதிரிகரிப்பு காரணமாக அந்நாட்டு பிரதமர் தனது திருமணத்தை கூட ஒத்தி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நியூசிலாந்தில் அரசின் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரவூர்தி சாரதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் தலைநகர் வெலிங்டனில் பாரவூர்திகள் மற்றும் கார்களில் அணிவகுத்து நாடாளுமன்றம் அமைந்துள்ள வீதியை முற்றுகையிட்டுள்ளனர்.





