கணிதப் பிரிவில் வவுனியாவில் முதலிடம் பெற்ற மாணவி நதீரா!
சமுதாயத்திற்கு ஒரு சக பாடியாக இருக்க விரும்புகிறேன் என கணிதப் பிரிவில் வவுனியா மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி நதீரா அற்புதராஜா தெரிவித்துள்ளார்.
அதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், கணிதப் பிரிவில் நான் 3 ஏ சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் முதல் நிலையை பெற்றுள்ளேன்.
நான் இந்த நிலையை அடைவதற்கு காரணமான வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகத்திற்கு நன்றிகளை கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
பொறியியலாளர் கனவு
இந்த வெற்றிக்கு அயராது உழைத்த எனது ஆசிரியர்களுக்கும் சக நண்பர்களுக்கும் நன்றிகள்.

பல கஷ்டங்களுக்கு மத்தியில் ஆய்வுகூட வசதியையும் நூலக வசதியையும் செய்து தந்தமையால் நாம் சிறப்பாக படித்தோம். அடுத்து வரும் மாணவர்களுக்கும் அந்த வசதியை செய்து கொடுக்க வேண்டும்.
பொறியியலாளராக வரவேண்டும் என்பது எனது விருப்பம் என்பதுடன் இந்த சமுதாயத்திற்கு நல்லதொரு சகபாடியாகவும் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 3 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
5 நாட்கள் முன்