அமெரிக்காவை நிர்கதியாக்கும் அரஷ்-2 ட்ரோன்கள்! ஈரான் இராணுவம் வெளியிட்ட அறிவிப்பு
அமெரிக்க AWACS மற்றும் எரிபொருள் நிரப்பும் விமானங்கள் உள்ள இடங்கள் மற்றும் பிராந்தியத் தளங்களைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் இராணுவம் அறிவித்துள்ளது.
பென் குரியன் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க AWACS மற்றும் எரிபொருள் நிரப்பும் விமானங்கள் உள்ள இடங்கள், ஏவுகணைகள் மற்றும் போர் ட்ரோன்களை கண்டறிந்து கண்காணிக்கும் ரேடார் தளம், மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நிறுத்தப்பட்டிருந்த போர் ஆளில்லா விமானங்களை எதிர்கொள்ளும் மின்னணுப் போர் தளங்கள் ஆகியவற்றின் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.
தாக்குதல்களுக்கு பதிலடி
இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானுக்கு எதிராக, குறிப்பாக குடியிருப்பு மற்றும் இராணுவம் இல்லாத இடங்களைக் குறிவைத்து நடத்தும் வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பிராந்திய நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்களையும், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள இராணுவப் பகுதிகளையும் ட்ரோன் தாக்குதல்கள் மூலம் குறிவைத்ததாகவும் ஈரான் இராணுவம் கூறியுள்ளது.
அரஷ்-2 ஆளில்லா விமானங்கள்
பெறப்பட்ட தகவல்கள் மற்றும் செயற்கைக்கோள் படங்களின் கண்காணிப்பின்படி, இந்தத் தாக்குதல்கள் அந்த மையங்களுக்குக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியதோடு, இராணுவ விமானங்களுக்கான போர் நடவடிக்கைகள், போர் ஆதரவு மற்றும் ஏவுகணைகள், போர் ட்ரோன்களை கண்காணிக்கும் பணிகளையும் கடுமையாகப் பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.

Image Credit: The Economic Times
சமீபத்திய தாக்குதல்களின் போது, 2,000 கிலோமீற்றர் செயல்பாட்டு வரம்பு கொண்ட சக்திவாய்ந்த அரஷ்-2 ட்ரோன்கள் ஈரான் பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், குறி்த்த தாக்குதல்கள் தொடர்பில் அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் இருந்து எந்தவித உறுதிப்படுத்தல்களும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 3 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
5 நாட்கள் முன்