அரச வைத்தியசாலைகளில் இன்று திடீர் வேலைநிறுத்தம்!
நாடு முழுவதும் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று (21) காலை 8.00 மணி முதல் 24 மணித்தியால அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அந்தச் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம குறிப்பிட்டார்.
மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளரின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிராக சுகாதார அமைச்சு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்த வேலைநிறுத்தப் போராட்டம் இன்று ஐந்தாவது நாளாகவும் தொடர்வதாக அதன் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நிலவும் நிர்வாகச் சிக்கல்களுக்கு இதுவரை உரிய தீர்வு வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |