பாகிஸ்தானில் காவல் பயிற்சி மையத்தின் மீது தற்கொலைத் தாக்குதல்
Pakistan
Suicide Attack In Pakistan
By Sumithiran
பாகிஸ்தானில் உள்ள காவல் பயிற்சி மையத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 07 காவல் அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
தாக்குதல் நடத்த வந்த 06 தீவிரவாதிகளும் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரின் எதிர்த் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
5 மணி நேரம் துப்பாக்கிச் சண்டை
வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு காவல் பயிற்சி மையத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்ததாகவும், இரு தரப்பினருக்கும் இடையே கிட்டத்தட்ட 5 மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலில் மேலும் 13 காவல் அதிகாரிகள் காயமடைந்தனர், மேலும் அங்குள்ள அனைத்து ஊழியர்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்