சுமந்திரன் தலைவரானால் தமிழ் தேசியம் அழிந்து போய்விடும் : அபாய அறிவிப்பை வெளியிட்ட சீனித்தம்பி யோகேஸ்வரன்

Ilankai Tamil Arasu Kachchi M A Sumanthiran S. Sritharan
By Sumithiran Jan 18, 2024 06:45 PM GMT
Report

இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் தமிழ்த் தேசியத்தை பாதுகாப்பதற்காகவே தலைவர் தெரிவில் போட்டியிடுகிறேன் என தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், இருந்த போதிலும் தலைவர் தெரிவுக்கான வாக்களிப்பில் நான் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கே எனது வாக்கை அளிப்பேன் என தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் 90 வீதமான பொதுச்சபை உறுப்பினர்கள் தமிழ் தேசியத்துடன் பயணித்து சிறீதரனுக்கே ஆதரவளிப்பர். தமிழ் தேசியத்திற்கெதிராக கருத்து தெரிவிக்கும் சுமந்திரன் கட்சிக்கு தலைவராக வந்தால் இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் இருந்து தமிழ் தேசியம் இல்லாது போய்விடும் - என்றார்.

யாழ் ஊடக அமையத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியத்தின் கட்சிகளை இணைப்பது சாத்தியமில்லை: தமிழ் தொழிலதிபர் ஆணித்தரம்

தமிழ்த் தேசியத்தின் கட்சிகளை இணைப்பது சாத்தியமில்லை: தமிழ் தொழிலதிபர் ஆணித்தரம்

கிழக்கு மாகாணத்திலும் தகுதியானவர்கள் 

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கு வடக்கு மாகாணத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனும் போட்டியிடப் போவதாக நான் அறிந்தேன். அந்த வகையில் கிழக்கு மாகாணத்தில் இருந்து யாராவது போட்டியிட வேண்டுமென நான் ஏனையவர்களிடம் கோரிக்கை விடுத்தேன். அப்பொழுது அவர்கள் என்னை போட்டியிடுமாறு வலியுறுத்தினார்கள். அதன்படியே நான் இந்த தலைவர் தெரிவுக்கு போட்டியிடுகிறேன்.

சுமந்திரன் தலைவரானால் தமிழ் தேசியம் அழிந்து போய்விடும் : அபாய அறிவிப்பை வெளியிட்ட சீனித்தம்பி யோகேஸ்வரன் | Sumandran Becomes Leader Tamil Nation Destroyed

இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு தலைவராகுவதற்கு கிழக்கு மாகாணத்திலும் தகுதியானவர்கள் இருக்கிறார்கள் என்பதை காட்டுவதற்காகவே கட்சியின் தலைவர் தேர்தலில் நான் போட்டியிடுகிறேன்.

எனது குடும்பம் தமிழரசு கட்சியின் பாரம்பரியத்தில் இருந்து வந்தது. இந்த தலைவர் தெரிவில் போட்டியிடுகின்ற மூவருமே 2010 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் மூலம் நாடாளுமன்றுக்கு வந்தவர்கள்.

சிறார்களின் அந்தரங்க காணொளிகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

சிறார்களின் அந்தரங்க காணொளிகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

தமிழ் தேசியத்திற்கு எதிரானவர் சுமந்திரன்

அந்த வகையில் சுமந்திரனை பொறுத்தவரையில் அவர் ஒரு சிறந்த சட்டத்தரணி. ஆனால் அவர் தமிழ்த் தேசியத்திற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருபவர். அவ்வாறு தமிழ் தேசியத்திற்கெதிராக கருத்து தெரிவிக்கும் ஒருவர் இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு தலைவராக வந்தால் இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் இருந்து தமிழ் தேசியம் இல்லாது போய்விடும். இவ்வளவு காலமும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கொண்டிருந்த கொள்கைகள் கோட்பாடுகள் எல்லாம் அத்தோடு இல்லாமல் போய்விடும்.

சுமந்திரன் தலைவரானால் தமிழ் தேசியம் அழிந்து போய்விடும் : அபாய அறிவிப்பை வெளியிட்ட சீனித்தம்பி யோகேஸ்வரன் | Sumandran Becomes Leader Tamil Nation Destroyed

அதேவேளை அடுத்ததாக போட்டியிடும் சிறீதரனை பார்க்கும் போது தமிழ்த் தேசிய கருத்துக்களையே தொடர்ந்து வலியுறுத்துகிறார். சிறீதரனுக்கு சர்வதேச நாடுகளிலும் செல்வாக்கு இருக்கின்றது. அவருடன் நான் வெளிநாடுகளுக்கு செல்லும் போது இதனை அவதானித்திருக்கிறேன்.

சிறீதரனே பொருத்தமானவர்

ஆகவே அவர் தமிழ் தேசியத்துடன் பயணிப்பவர் என்ற வகையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு தலைவராகுவதற்கு பொருத்தமுடையவர். அதேவேளை அவரிடம் ஒரு குணம் இருக்கின்றது. புத்திஜீவிகள், முக்கிய பிரதிநிதிகள், சர்வதேச நாட்டு பிரதிநிதிகளோ அவரிடம் தலைவர் தெரிவில் விட்டுக்கொடுங்கள். சுமந்திரன் இம்முறை வரட்டும் அடுத்த முறை நீங்கள் வாருங்கள் என கேட்டால் சிலவேளைகளில் சிறீதரன் விட்டுக் கொடுத்து விடக்கூடிய நிலை காணப்பட்டது.

சுமந்திரன் தலைவரானால் தமிழ் தேசியம் அழிந்து போய்விடும் : அபாய அறிவிப்பை வெளியிட்ட சீனித்தம்பி யோகேஸ்வரன் | Sumandran Becomes Leader Tamil Nation Destroyed

சிறீதரன் விட்டுக்கொடுத்தால் நேரடியாக சுமந்திரன் தலைவராக தெரிவாகுவார். அதனை தவிர்ப்பதற்காகவே நான் குறித்த தலைவர் தெரிவில் போட்டியிடுகின்றேன். இந்த நிலையில் கிழக்கு மாகாணத்தில் சுமந்திரன் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டார். இதன்போது நான் ஆராய்ந்ததில் அவருக்கு தான் அதிக ஆதரவு நிலைமை காணப்பட்டது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கப்போகும் மோசடியாளர்கள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கப்போகும் மோசடியாளர்கள்

அப்பொழுது தீடீரென சிறீதரன் என்னை தொடர்பு கொண்டு கிழக்கு மாகாணத்துக்கு வருவதாக தெரிவித்தார். அப்பொழுது நான் அவரிடம் தெரிவித்தேன். நீங்கள் தலைவர் தெரிவில் போட்டியிடுவதில் உறுதியாக இருந்தால் நான் விட்டுத்தர தயாராக இருக்கின்றேன். ஏனென்றால் தமிழ்த் தேசியம் வெற்றி பெற வேண்டும் என்பதே எனது நோக்கம் என்றேன்.

திடீரென தொடர்பு கொண்ட சிறீதரன்

அப்பொழுது சிறீதரன் "நான் போட்டியிடுவதில் இருந்து பின் வாங்கமாட்டேன்" என தெரிவித்தார். அப்பொழுது நான் சொன்னேன். தலைவர் தெரிவில் நான் தொடர்ந்து இருப்பேன். நீங்கள் விலகி விடுவீர்களோ என்ற சந்தேகம் உள்ளது என்றேன். நானும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான அரியநேத்திரன், ஸ்ரீநேசன் ,முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நடராஜா ஆகியோரும் சிறீதரனுக்கு ஆதரவாக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் தீவிர பிரசாரம் செய்தோம். அந்த வகையில் மட்டக்களப்பைச் சேர்ந்த பொதுச்சபையின் 90 வீதமான உறுப்பினர்கள் சிறீதரனுக்கு ஆதரவளிக்க முன்வந்தார்கள்.

சுமந்திரன் தலைவரானால் தமிழ் தேசியம் அழிந்து போய்விடும் : அபாய அறிவிப்பை வெளியிட்ட சீனித்தம்பி யோகேஸ்வரன் | Sumandran Becomes Leader Tamil Nation Destroyed

அம்பாறை மாவட்டத்திலும் சுமந்திரனுக்கு ஆதரவான நிலைப்பாடே காணப்பட்டது. ஆனபோதும் நாங்கள் அங்கு போய் தமிழ் தேசியம் தொடர்பாக வலியுறுத்திய போது 85 வீதமானவர்கள் சிறீதரனுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளார்கள். திருகோணமலையில் நான் அரச உத்தியோகத்தராக கடமையாற்றியவன் என்ற வகையில் திருகோணமலை பொதுச் சபை உறுப்பினர்களுடன் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டேன். அப்பொழுது அவர்கள் எனக்கு ஆதரவளிக்க முன்வந்தார்கள்.

லண்டனில் குடியிருப்புகளின் விலையில் வீழ்ச்சி

லண்டனில் குடியிருப்புகளின் விலையில் வீழ்ச்சி

ஆனாலும் நான் குறித்த விடயத்தை தெளிவுபடுத்திய நிலையில் 90 வீதமானவர்கள் தற்போது சிறீதரனுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளார்கள்.

ஆகவே கிழக்கு மாகாணத்தில் உள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் 90 வீதமான பொதுச்சபை உறுப்பினர்கள் தமிழ் தேசியத்துடன் பயணித்து சிறீதரனுக்கே ஆதரவளிப்பர். அதேபோல வடக்கு மாகாண பொதுச் சபை உறுப்பினர்களும் செயற்படுவார் என நம்புகிறேன். எதிர்வரும் 21ம் திகதி நடைபெறும் தலைவர் தெரிவுக்கான வாக்களிப்பில் நான் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கே எனது வாக்கை அளிப்பேன் எனவும் தெரிவித்தார்.  


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026