ரணிலிடம் சுமந்திரன் விடுத்துள்ள கோரிக்கை..!
அதியுயர் பாதுகாப்பு வலயப்பிரகடன வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்ததைப்போன்று புனர்வாழ்வுப்பணியகச் சட்டமூலத்தையும் மீளப்பெறுமாறு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை வலியுறுத்தியுள்ளார்.
1955 ஆம் ஆண்டு 32 ஆம் இலக்க உத்தியோகபூர்வ இரகசியங்கள் சட்டத்தின்கீழ் கொழும்பிலுள்ள சில பகுதிகளை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தி கடந்த செப்டெம்பர் மாதம் 23 ஆம் திகதி அதிபரும் பாதுகாப்பு அமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டது.
அதற்கு நாடளாவிய ரீதியில் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்புக் கிளம்பியதுடன், அதற்கெதிராக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவ்வர்த்தமானியை வலுவற்றதாக்கி அதனை இரத்துச்செய்யும் வகையிலான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டது.
அதனை வரவேற்ற சுமந்திரன் இதேபோன்று புனர்வாழ்வுப்பணியகச் சட்டமூலத்தையும் வாபஸ் பெறுமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்கவை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடனும் ஏனைய செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,