NPP யாழ். மாநகர மேயர் வேட்பாளர் கபிலனுக்குஎதிராக வழக்கு: சீறும் எம்.ஏ.சுமந்திரன்
தேசிய மக்கள் சக்தியின் (NPP) யாழ். மாநகர மேயர் வேட்பாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாநகர சபை மேயர் வேட்பாளர் மாநகர சபை மேயராக அல்ல, யாழ். மாநகர சபையின் உறுப்பினராகக் கூடப் பதவி வகிக்க முடியாது என எம்.ஏ.சுமந்திரன் (M.A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவரை வெளியேற்றுவோம்
யாழ். மாநகர சபையின் எல்லைக்குள் வசிக்காத தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாநகர சபை மேயர் வேட்பாளர் சுந்தரமூர்த்தி கபிலன் மாநகர சபை மேயராக அல்ல, யாழ். மாநகர சபையின் உறுப்பினராகப் கூடப் பதவி வகிக்க முடியாது.
அவர் உறுப்பினராக வந்தால் வழக்குத் தொடர்ந்து அவரை வெளியேற்றுவோம் எனவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
