ஹர்த்தாலுக்குள் மறைந்திருக்கும் சுயநல அரசியல்: சுமந்திரனின் ரகசிய நகர்வு

M. A. Sumanthiran Sri Lanka SL Protest
By Shalini Balachandran Aug 20, 2025 09:33 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

தமிழர் அரசியல் என்ற பக்கத்தில் இருந்து எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) என்ற பெயர் மக்களால் புறக்கணிக்கப்பட்டு சில காலமாக எவ்வித அரசியல் தலையீடும் இன்றி காணாமலாக்கப்பட்டு இருந்தது.

இருப்பினும், கடந்த இரு நாட்களாக தமிழர் தரப்பு மாத்திரமின்றி தென்னிலங்கை தரப்பு அரசியல், சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் என மீண்டும் சுமந்திரன் பேசுபொருளாக மாறியுள்ளார்.

காரணம், வடக்கு மற்றும் கிழக்கில் கடந்த திங்கட்கிழமை (18) இடம்பெற்ற கடையடைப்பு போராட்டம்தான்.

வடக்கில் இடம்பெறும் குற்றச்செயல்கள் மற்றும் அதிகரித்த இராணுவ பிரசன்னம் உள்ளிட்டவற்றுக்கு எதிராக கடந்த 18 ஆம் திகதி வடக்கு - கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டத்திற்கு தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்திருந்தார்.

தமிழரசு கட்சியை வைத்து தனிநபர் ஒருவர் தன்னிச்சையாக முடிவெடுத்து இந்த அறிவிப்பை வெளியிட்டதாக சில இடங்களில் கடையடைப்பு போராட்டமானது புறக்கணிக்கப்பட்ட போதும் சில இடங்களில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இது தொடர்பில் விளக்கமளித்த சுமந்திரன் இது தனிப்பட்ட ரீதியில் எனது அழைப்பு இல்லை என்ற அடிப்படையில் ஊடகங்களில் தெளிவுப்படுத்தி இருந்தார்.

இருப்பினும், இது ஏற்றக்கொள்ள கூடிய ஒரு பதிலாக இல்லை என பலதரப்பட்ட விமர்சனங்கள் வெளியாகி இருந்ததுடன் தொழில் பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்க (Mahinda Jayasinghe) கடையடைப்பு தொடர்பிலும் மற்றும் சுமந்திரன் தொடர்பிலும் நேற்று (19) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

இவ்வாறு, தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக இருப்பினும் அரசியல் வட்டாரத்தில் மிகவும் பேசுபொருளுக்கு உள்ளாக்கப்படாமல் காணாமலாக்கப்பட்டிருந்த சுமந்திரன் தொடர்ந்து இந்த இரு நாட்களாக தொடர்ச்சியாக பேசப்பட்டு வருகின்றார்.

இவ்வாறு அவர் மீண்டும் பேசுபொருளாக மாறுவதற்கும் அரசியல் களத்தில் மீண்டும் நுழைவதற்காகவும்தான் கடையடைப்பு என்ற விவகாரத்தை கையில் எடுத்துள்ளதாக சுவாமி சங்கரானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த விடயத்தை அவர் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழர் பிரதேசத்தில் இராணுவ பிரசன்னத்தை இல்லாமல் ஆக்குவதை தாண்டி எதிர்கால அரசியலுக்காகவும் தனிப்பட்ட அரசியல் இருப்புக்காகவும் இந்த கடையடைப்பு போராட்டத்தை சுமந்திரன் முன்னெடுத்ததாக நான் கருத்துகின்றேன்.

சுமந்திரன் என்பவர் ஒரு சாதாரண மனிதர் அல்ல, அவர் ஒரு புத்திஜீவி மற்றும் அறிவாளி அத்துடன் நல்ல ஆளுமையுள்ளவர்.

அப்படிப்பட்டவர் இதற்காக காலம் நேரம் என்பவற்றை முறையாக தீர்மானித்து அனைவரின் ஒத்துழைப்புடன் நடத்தி இருக்க வேண்டும்.

இருப்பினும், தமிழ் மக்கள் போராட கூடியவர்கள் அல்ல என்பதை எடுத்துக்காட்டுவதற்காக இந்த போராட்டத்தை கையில் எடுத்துள்ளார்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கடையடைப்பு போராட்டம், சுமந்திரனின் அரசியல் எதிர்கால், தமிழர் தரப்பு அரசியல், தென்னிலங்கை அரசியல் மற்றும் பலதரப்பட்ட அரசியல் சார் விடயங்கள் தொடர்பில் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,


மனைவி வீடு திரும்ப வசதி செய்து தருமாறு மின் கம்பத்தின் மேல் ஏறிய நபர்

மனைவி வீடு திரும்ப வசதி செய்து தருமாறு மின் கம்பத்தின் மேல் ஏறிய நபர்

முன்னாள் முதலமைச்சரின் காணியில் வெடிகுண்டு மீட்பு

முன்னாள் முதலமைச்சரின் காணியில் வெடிகுண்டு மீட்பு

இலங்கையில் கஞ்சா பயிரிட அனுமதி : மருத்துவ சங்கம் கடும் எதிர்ப்பு

இலங்கையில் கஞ்சா பயிரிட அனுமதி : மருத்துவ சங்கம் கடும் எதிர்ப்பு

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025