ஹர்த்தாலுக்குள் மறைந்திருக்கும் சுயநல அரசியல்: சுமந்திரனின் ரகசிய நகர்வு

M. A. Sumanthiran Sri Lanka SL Protest
By Shalini Balachandran Aug 20, 2025 09:33 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

தமிழர் அரசியல் என்ற பக்கத்தில் இருந்து எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) என்ற பெயர் மக்களால் புறக்கணிக்கப்பட்டு சில காலமாக எவ்வித அரசியல் தலையீடும் இன்றி காணாமலாக்கப்பட்டு இருந்தது.

இருப்பினும், கடந்த இரு நாட்களாக தமிழர் தரப்பு மாத்திரமின்றி தென்னிலங்கை தரப்பு அரசியல், சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் என மீண்டும் சுமந்திரன் பேசுபொருளாக மாறியுள்ளார்.

காரணம், வடக்கு மற்றும் கிழக்கில் கடந்த திங்கட்கிழமை (18) இடம்பெற்ற கடையடைப்பு போராட்டம்தான்.

வடக்கில் இடம்பெறும் குற்றச்செயல்கள் மற்றும் அதிகரித்த இராணுவ பிரசன்னம் உள்ளிட்டவற்றுக்கு எதிராக கடந்த 18 ஆம் திகதி வடக்கு - கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டத்திற்கு தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்திருந்தார்.

தமிழரசு கட்சியை வைத்து தனிநபர் ஒருவர் தன்னிச்சையாக முடிவெடுத்து இந்த அறிவிப்பை வெளியிட்டதாக சில இடங்களில் கடையடைப்பு போராட்டமானது புறக்கணிக்கப்பட்ட போதும் சில இடங்களில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இது தொடர்பில் விளக்கமளித்த சுமந்திரன் இது தனிப்பட்ட ரீதியில் எனது அழைப்பு இல்லை என்ற அடிப்படையில் ஊடகங்களில் தெளிவுப்படுத்தி இருந்தார்.

இருப்பினும், இது ஏற்றக்கொள்ள கூடிய ஒரு பதிலாக இல்லை என பலதரப்பட்ட விமர்சனங்கள் வெளியாகி இருந்ததுடன் தொழில் பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்க (Mahinda Jayasinghe) கடையடைப்பு தொடர்பிலும் மற்றும் சுமந்திரன் தொடர்பிலும் நேற்று (19) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

இவ்வாறு, தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக இருப்பினும் அரசியல் வட்டாரத்தில் மிகவும் பேசுபொருளுக்கு உள்ளாக்கப்படாமல் காணாமலாக்கப்பட்டிருந்த சுமந்திரன் தொடர்ந்து இந்த இரு நாட்களாக தொடர்ச்சியாக பேசப்பட்டு வருகின்றார்.

இவ்வாறு அவர் மீண்டும் பேசுபொருளாக மாறுவதற்கும் அரசியல் களத்தில் மீண்டும் நுழைவதற்காகவும்தான் கடையடைப்பு என்ற விவகாரத்தை கையில் எடுத்துள்ளதாக சுவாமி சங்கரானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த விடயத்தை அவர் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழர் பிரதேசத்தில் இராணுவ பிரசன்னத்தை இல்லாமல் ஆக்குவதை தாண்டி எதிர்கால அரசியலுக்காகவும் தனிப்பட்ட அரசியல் இருப்புக்காகவும் இந்த கடையடைப்பு போராட்டத்தை சுமந்திரன் முன்னெடுத்ததாக நான் கருத்துகின்றேன்.

சுமந்திரன் என்பவர் ஒரு சாதாரண மனிதர் அல்ல, அவர் ஒரு புத்திஜீவி மற்றும் அறிவாளி அத்துடன் நல்ல ஆளுமையுள்ளவர்.

அப்படிப்பட்டவர் இதற்காக காலம் நேரம் என்பவற்றை முறையாக தீர்மானித்து அனைவரின் ஒத்துழைப்புடன் நடத்தி இருக்க வேண்டும்.

இருப்பினும், தமிழ் மக்கள் போராட கூடியவர்கள் அல்ல என்பதை எடுத்துக்காட்டுவதற்காக இந்த போராட்டத்தை கையில் எடுத்துள்ளார்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கடையடைப்பு போராட்டம், சுமந்திரனின் அரசியல் எதிர்கால், தமிழர் தரப்பு அரசியல், தென்னிலங்கை அரசியல் மற்றும் பலதரப்பட்ட அரசியல் சார் விடயங்கள் தொடர்பில் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,


மனைவி வீடு திரும்ப வசதி செய்து தருமாறு மின் கம்பத்தின் மேல் ஏறிய நபர்

மனைவி வீடு திரும்ப வசதி செய்து தருமாறு மின் கம்பத்தின் மேல் ஏறிய நபர்

முன்னாள் முதலமைச்சரின் காணியில் வெடிகுண்டு மீட்பு

முன்னாள் முதலமைச்சரின் காணியில் வெடிகுண்டு மீட்பு

இலங்கையில் கஞ்சா பயிரிட அனுமதி : மருத்துவ சங்கம் கடும் எதிர்ப்பு

இலங்கையில் கஞ்சா பயிரிட அனுமதி : மருத்துவ சங்கம் கடும் எதிர்ப்பு

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026