சிங்கள அரசுக்கு சாமரம் வீசிக்கொண்டு தமிழகத்தில் இருப்பவர்களை குழப்பாதீர்கள் - சுமந்திரனுக்கு கடும் எச்சரிக்கை
செல்லும் நாடுகள் எல்லாம் உலகத் தமிழர்களால் துரத்தி அடிக்கப்படும் சுமந்திரன், பதின்மூன்றாம் திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என சென்னை பெரியார் திடலில் அனைத்து கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளும் மாநாடு ஏற்பாடு செய்திருப்பதாய் தெரிவித்திருந்தார்.
ஆனால் தமிழக அரசியல் தலைவர்கள் யாரும் தங்களுக்கு ஒரு அழைப்பு இல்லை என்றார்கள்.
எனவே பொய்யான செய்திகளை பத்திரிகை செய்தியாக கொடுத்து விட்டு அதேநாளில் சென்னையில் பத்திரிகையாளர் மாநாட்டை நடத்தியுள்ளார்.
எனவே சுமந்திரன் உட்பட ஏனைய இலங்கை அரசியல் சக்திகளுக்கு சொல்ல விரும்பும் கருத்து ஒன்றுதான் சிங்கள அரசுக்கு சாமரசம் வீசும் கையோடு தமிழ் நாட்டிற்கு வந்து இங்கு இருப்பவர்களை குழப்பும் வேலையை செய்ய வேண்டாம்.
இவ்வாறு தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பின் தலைவர் பாரி மைந்தன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு,




ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
