சலேவுக்கு ஆதரவான மனுக்கள்! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் பேரில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனது கைது மற்றும் தடுப்புக்காவலுக்கு எதிராக முன்னாள் அரச புலனாய்வு சேவைத் தலைவர் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனுவிற்கு ஆதரவாகத் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து இடைக்கால மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, சம்பந்தப்பட்ட அனைத்து மனுக்களையும் எதிர்வரும் 17ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெங்கமுவே நலக்க தேரர், தேசபக்தி தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் குணதாச அமரசேகர மற்றும் பல தரப்பினர் இந்த இடைக்கால மனுக்களைத் தாக்கல் செய்திருப்பதாக தெரியவருகிறது.
நீதிமன்ற அறிவிப்பு
இந்த நிலையில், குறித்த மனுக்கள் இன்று (10) மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர்களான நீதிபதிகள் ரொஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போது, எதிர்மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹெரத், இடைக்கால மனு தொடர்பாக நீதிமன்றம் அறிவிப்பு அனுப்பினால் மட்டுமே இந்த இடைக்கால மனுக்களைப் பரிசீலிக்க முடியும் என்று நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த வகையில், வாதங்கள் முடிவடைந்த பின்னர் இந்த இடைக்காலக் மனுக்குள் பரிசீலிக்கப்படும் என மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி ரோகந்த அபேசூரிய தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |