நிபந்தனைகளுடன் சஜித் தரப்பு விடுத்துள்ள அறிவிப்பு
sajith
Support
interim government
By Vanan
நாட்டில் அரசியல் நெருக்கடி வலுப்பெற்றுள்ள நிலையில் நிறைவேற்று அதிகார அரச தலைவருக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்துவதற்காக அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டமூலத்தைக் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்து.
21ஆவது திருத்தத்தை ஏற்றால் இடைக்கால அரசுக்கு ஆதரவு வழங்குவதாக ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த யோசனைக்கு அரசு ஆதரவு தெரிவிக்கும் பட்சத்திலேயே, இடைக்கால அரசை அமைக்க, இணக்கம் தெரிவிக்க அந்தக் கட்சி முடிவெடுத்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி