வடக்கு போதைப்பொருள் மாஃபியா கும்பலில் அரசாங்க ஆதரவாளர் : கிளம்பிய சர்ச்சை!
தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஆதரவாளர் ஒருவரே வடக்கிற்கு பாரியவிளான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிரேஷ்ட ஊடகவியலாளரான கீர்த்தி ரத்நாயக்க இதனை வெளிப்படுத்தியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ முகநூல் பதிவில் பதிவிட்டுள்ளார்.
அரசாங்க ஆதரவாளர்
அவர் வெளியிட்டுள்ள பதிவின்படி, “முகமது பாஹிம் எனக் கூறப்படும் நபர் தேசிய மக்கள் சக்தியின் வலுவான ஆதரவாளர்.
மன்னார் மேயர் பதவிக்கு கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் அவர் போட்டியிட்டார். அவர் அரசாங்க அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்கி சட்டவிரோதமாக தனது மோசடிகளுக்கு அவர்களைப் பயன்படுத்தி வருகிறார். காவல்துறை அதிகாரிகள், சமுர்த்தி அதிகாரிகள், நிர்வாக அதிகாரிகள் அவர்களில் முக்கியமானவர்கள்.
அண்மையில் நொரைச்சோலை OIC க்கும் பாஹிமுக்கும் இடையிலான உரையாடல் இலஞ்சம் வாங்கியதற்கான சான்றாகும்.
அவர் வடக்கு மாகாணத்திற்கு மிகப்பெரிய ஹெரோயின் மற்றும் கஞ்சா கடத்தல்காரர். தனுஷ்கோடி மற்றும் மன்னாரின் கடல் வழியாக பாஹிமிடமிருந்து போதைப்பொருள் இறக்குமதி செய்யப்படுகிறது. மன்னார் தீவில் இயங்கும் காற்றாலை மின் நிலையங்கள் மற்றும் இல்மனைட் திட்டங்களுக்கு எதிரான முக்கிய நபராக இவர் காணப்படுகிறார்.
காற்றாலை மின் நிலையங்கள் மற்றும் இல்மனைட் திட்டங்கள் கடற்கரையில் இரவும் பகலும் செயல்படுத்தப்பட்டால், பாஹிம் போதைப்பொருள் கடத்தல்களில் சுதந்திரமாக ஈடுபட முடியாது. சமீபத்தில் மன்னாரில் காற்றாலை மின் நிலையங்களுக்கு எதிரான போராட்டத்திற்கு நிதி உதவி வழங்கிய முக்கிய நபர் ஃபஹீம்.
பள்ளிவாசலின் பணிகளுக்கும் ஃபஹீம் அதிக செலவு செய்கிறார். எனவே, பள்ளிவாசல் ஃபஹீமின் கைப்பாவையாக மாறியுள்ளது.” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |