சிக்குவாரா கோட்டாபய : உச்சநீதிமன்றம் விடுத்த உத்தரவு..!
சட்டவிரோத இழப்பீட்டு கோரிக்கைகள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அடிப்படை உரிமைகள் மனுவில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் காவல்துறை , படை அதிகாரிகளுக்கு அழைப்பாணை அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மே 9, 2022 அன்று வெடித்த ‘அரகலய’போராட்டத்தின் போது தங்கள் வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு சட்டவிரோதமாக பணம் பெற்றதாகக் கூறப்படும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டை திரும்பப் பெற உத்தரவிடுமாறு கோரி உச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அழைப்பாணை அனுப்ப உத்தரவிடப்பட்டவர்கள்
இதன் அடிப்படையிலேயே உச்சநீதிமன்றம் இந்த அழைப்பாணையை அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தின் உத்தரவின்படி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன; முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன; முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன; முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர்கள் பிரசன்ன ரணதுங்க மற்றும் டிரான் அலஸ்; மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜகத் அல்விஸ் ஆகியோருக்கு அழைப்பாணை அனுப்பப்பட உள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |