சுரேஸ் சாலே குதிரையில் புலிக்காய்ச்சல் சவாரி! சதிகளை மறைக்கும் சுதி அரசியல்!
ஈழத்தமிழினம் மீதான ஒடுக்குமுறை போர் மற்றும் அதிகார தக்கவைப்பு உட்பட்ட அனைத்து மேலண்மை களங்களிலும் வெற்றிக்காக எதனையும் (ஈஸ்ரர் தாக்குதல் சதிகள் உட்பட) செய்யலாம் என்ற நிலைப்பாட்டில் உள்ள தென்னிலங்கையில் இப்போது அதன் துடுப்பாட்ட ரசிகர்களுக்கு பெரும் கடுப்பு ஏற்பட்டுள்ளது.
ரி-20 எனப்படும் உலக கிண்ணதுடுப்பாட்ட சுற்றுப்போட்டியில் தமது சொந்த மண்ணில் வைத்தே முழுமையாக தமது நாடு வெளியேற்றப்பட்டதையடுத்து அதன் துடுப்பாட்ட ரசிகர்கள் தற்போது கொதித்தெழுந்து நாட்டின் துடுப்பாட்ட சங்க தலைவர் துரத்தப்படவேண்டும் என சீறுகிறார்கள்.
நேற்று நியூசிலாந்து அணியுடனான ஆடுகளத்தில் தமது அணி பொலபொலவென சரிந்து தோல்வியடைந்ததை அதன் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இதேபோலவே சிலவருடங்களுக்கு முன்னர் புலிகளை ஒழிப்பதில் முக்கிய பங்கு வகித்த முகம் என்ற அடிப்படையில் தமது போர்க்கால இராணுவப் புலனாய்வு அதிகாரியான சுரேஸ் சாலே மீது கைவைத்த அநுர தரப்பையும் ராஜபக்ச அல்லக்கைகள் மற்றும் கடும்போக்காளர்களால் ஏற்க முடியாத எகிறல்கள் வரும் நிலையில் இந்தவிடயங்களை மையப்படுத்தி வருகிறது செய்தி வீச்சு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |