ஹிட்லரிடம் இருந்து தப்பியவரை கொன்றொழித்த புடின்(photo)
ஜேர்மனியின் முன்னாள் சர்வாதிகாரி ஹிட்லரின் வதைமுகாம்களில் இருந்து தப்பி அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தவர் புடினால் கொல்லப்பட்ட துயரம் அரங்கேறியுள்ளது.
உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 96 வயதான பொறிஸ் ரோமன் சென்கோ என்பவருக்கே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா (Dmytro Kuleba) வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
96 வயதான பொறிஸ் ரோமன்சென்கோ, புச்சென்வால்ட், பீனெமுண்டே, மிட்டல்பாவ்-டோரா, பெர்கன்-பெல்சன் ஆகிய நான்கு நாஜி வதை முகாம்களில் இருந்து தப்பியவர். அவர் இறப்பதற்கு முன் வரை உக்ரைன் கார்கிவ் பகுதியில் தனது அமைதியான வாழ்க்கையை களித்து வந்தார்.
ஆனால் கடந்த வெள்ளியன்று ரஷ்ய இராணுவத்தின் வெடிகுண்டு இவரது வீட்டில் விழுந்ததில் இவர் உயிரிழந்தார். ஹிட்லரிடம் இருந்து உயிர் பிழைத்த இவர் தற்போது புடினால் கொல்லப்பட்டுள்ளார் என பதிவிட்டுள்ளார்.
Borys Romanchenko, 96, survived four Nazi concentration camps: Buchenwald, Peenemünde, Mittelbau-Dora, Bergen-Belsen. He lived his quiet life in Kharkiv until recently. Last Friday a Russian bomb hit his house and killed him. Unspeakable crime. Survived Hitler, murdered by Putin. pic.twitter.com/QYJ4xrNYC9
— Dmytro Kuleba (@DmytroKuleba) March 21, 2022
