காவல்துறை காவலில் இருந்த கைதி மரணம்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Death
By Sumithiran
நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயது சந்தேக நபர், கந்தேகெட்டிய காவல்துறையின் காவலில் இருந்தபோது நோய்வாய்ப்பட்டு, கந்தேகெட்டிய பிரதேச மருத்துவமனையில் இருந்து மஹியங்கனை அடிப்படை மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 2) இரவு மாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இறந்தவர், நவரட்ண முதியன்செலாகே அஜந்த புஷ்பகுமார, மீகஹகியுலாவைச் சேர்ந்தவர்.
பிரேத பரிசோதனை
மஹியங்கனை அடிப்படை மருத்துவமனையில் இன்று பிரேத பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

மடோல்சிம காவல் நிலையப் பொறுப்பதிகாரி, சிஐ எச்.பி. திசாநாயக்க, உதவி காவல்துறை அத்தியட்சகர் வெஹித தேசப்பிரியவின் அறிவுறுத்தலின் பேரில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்