ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலை: இலங்கையுடன் கை கோர்க்கும் சுவிஸ் அரசு! எம்பிக்கள் சரமாரி கேள்வி

Sri Lankan Tamils Tamils Sri Lanka Switzerland
By pavan Jan 10, 2024 01:05 PM GMT
Report

ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை அரசுடன் சுவிஸ் அரசாங்கம் இணைந்து செயல்படுவதற்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு இனவெறி தாக்குதல்களையும் தமிழின அழிப்புகளையும் இன்று வரை நடாத்தி வருகிறது.

இவ்வாறான சூழலில் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசங்களில் தமிழர்கள் பன்னாட்டு நீதிகோரி தொடர்ச்சியாக போராடிவருகிறார்கள். இதுதொடர்பில் சுவிட்சர்லாந்து அரசு விரிவான முறையில் ஆராய்ந்து செயற்படாமல் சிறிலங்கா அரசுடன் நெருக்கமான உறவைப் பேணிவருகிறது.

அரசாங்கத்திற்கு எதிராக கேள்விகள்

இந்த நிலையில், இலங்கை அரசுடன் சுவிஸ் அரசாங்கம் இணைந்து செயல்படுவதற்கு எதிராக மோலினா ஃபேபியன் தலைமையிலான ஐந்து சுவிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து ஏழு வெளிப்படையான கேள்விகளை கேட்டுள்ளனர்.

இவ்வாறான சூழலில், சுவிஸ் அரசாங்கத்திற்கு எதிராக கேள்விகளை முன்வைத்த வைத்த ஐந்து சுவிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களை உலகத் தமிழர் இயக்கம் வரவேற்றுள்ளது.

ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலை: இலங்கையுடன் கை கோர்க்கும் சுவிஸ் அரசு! எம்பிக்கள் சரமாரி கேள்வி | Swiss Along Sri Lankan Against Eelam Tamils

இது தொடர்பாக உலகத் தமிழர் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழீழத்தில் சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு, தொடர்ந்து கொண்டிருக்கும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பு நடவடிக்கைகள், சட்டத்திற்கு முரணான கைதுகள், துன்புறுத்தல்கள், கொலைகள்,காணாமல் ஆக்கப்படுதல் என்பன இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழ் மக்களின் உரிமையும் நீதியும் தொடர்ச்சியாக மறுக்கப்படுகின்றன.

ஓய்வூதியதாரர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி..! வெளியாகிய புதிய அறிவித்தல்

ஓய்வூதியதாரர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி..! வெளியாகிய புதிய அறிவித்தல்

இனப்படுகொலை செய்த இலங்கை அரசு

இவ்வாறான சூழலில் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசங்களில் தமிழர்கள் பன்னாட்டு நீதிகோரி தொடர்ச்சியாக போராடிவருகிறார்கள்.

இவைதொடர்பில் சுவிட்சர்லாந்து அரசு விரிவான முறையில் ஆராய்ந்து செயற்படாமல் சிறிலங்கா அரசுடன் நெருக்கமான உறவைப் பேணிவருகிறது.

இவ்வாறான சூழமைவில் டிசம்பர் 21, 2023 அன்று MOLINA FABIAN தலைமையிலான ஐந்து சுவிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து சுவிஸ் அரசாங்கத்திடம் ஏழு வெளிப்படையான கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலை: இலங்கையுடன் கை கோர்க்கும் சுவிஸ் அரசு! எம்பிக்கள் சரமாரி கேள்வி | Swiss Along Sri Lankan Against Eelam Tamils

எழுப்பப்பட்ட கேள்விகள்:

1. நல்லிணக்கத்திற்கு அடிப்படையாக விளங்கும் போர்க்குற்றங்கள் மீதான நீதிவிசாரணையையும் அதன் தொடர்ச்சியான அரசியல் தீர்வையும் நடைமுறைப்படுத்த சுவிஸ் அரசாங்கம் எவ்வாறு ஆதரவு வழங்குகின்றது?

2. நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நிலைநாட்டத் தவறிய சிறிலங்கா அரசினால் உருவாக்கப்பட்ட "உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை" பன்னாட்டு மனித உரிமை நிறுவனங்களும், ஐ.நா மனித உரிமை ஆணையாளரும் விமர்சித்திருக்கின்ற சூழலில் சுவிட்சர்லாந்து அரசாங்கம் எவ்வாறு ஆதரவளிக்கிறது?

3. புலம்பெயர் அமைப்பு மற்றும் பௌத்த பிக்குகள் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட "இமயமலைப் பிரகடனத்தை" பெரும் பகுதியான தமிழ் கட்சிகள், பாதிக்கப்பட்ட தரப்புகள், சமூக அமைப்புகள் மற்றும் பல புலம்பெயர் அமைப்புகள் போன்றவற்றால் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் சுவிட்சர்லாந்து எந்தவகையில் ஆதரிக்கிறது?

இராணுவத்தினரிடம் சரணடைந்த முக்கிய போராளிகளுக்கு நடந்தது என்ன! சபையில் சிறீதரன் சீற்றம்

இராணுவத்தினரிடம் சரணடைந்த முக்கிய போராளிகளுக்கு நடந்தது என்ன! சபையில் சிறீதரன் சீற்றம்

தமிழர் இனப் பிரச்சனை தீர்வு

4. இது குறித்து சுவிட்சர்லாந்தில் வாழும் தமிழ் சமூகத்திடம் எந்தவொரு கருத்தாய்வும் ஏன் மேற்கொள்ளப்படவில்லை?

5. சர்வதேச ரீதியில் கடுமையாக விமர்சிக்கப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்ட தமிழர்களுக்கு ஆதரவாக சுவிட்சர்லாந்து அரசு எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது?

6. இலங்கையில் கைதுசெய்யப்பட்ட நபர்கள் சித்திரவதைக்கு உற்படுத்தப்படுவதுடன் கொலை செய்யப்படுவதாகவும் தற்போதும் அறிக்கைகள் வெளிவந்த வண்ணமுள்ளன. இந் நிலையில் சுவிசில் இருந்து இலங்கைக்கு புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்படும் போது அவர்களின் பாதுகாப்பிற்கு சுவிட்சர்லாந்து எவ்வாறு உத்தரவாதம் அளிக்கிறது?

ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலை: இலங்கையுடன் கை கோர்க்கும் சுவிஸ் அரசு! எம்பிக்கள் சரமாரி கேள்வி | Swiss Along Sri Lankan Against Eelam Tamils

7. 2023 இல் இலங்கைக்கு எத்தனை பேர் நாடுகடத்தப்பட்டார்கள்?

இந்த நிலையில், இவர்களின் இக்கேள்விகளுக்கான பதில்களை விரைவில் சுவிஸ் அரசு வெளியிடவுள்ளது.

இத்தருணத்தில் எம் இனம் சார்பில் கேள்விகள் எழுப்பிய மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய குறித்த நாடாளுமன்ற உறுபினர்களுக்கு சுவிஸ் வாழ் தமிழர்கள் சார்பாகவும் உலகத் தமிழர்கள் சார்பாகவும் உலகத் தமிழர் இயக்கமாகிய நாங்கள் இம் முயற்சியை வரவேற்பதுடன் உளப்பூர்வமான நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், எதிர்காலத்தில் தமிழ் மக்கள் தொடர்பான அனைத்து விடையங்களிலும் நிலையான மற்றும் பயனுள்ள முடிவுகளை எடுப்பதற்கு உலகத் தமிழர் இயக்கம் உறுதுணையாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்வதுடன் இவர்களுடனான நேரடியான தொடர்பாடல்களைப் பேணுவதனூடாக தமிழர் இனப் பிரச்சனை தீர்வு தொடர்பாக தீர்க்கமான முடிவுகளை மேற்கொள்ள சுவிஸ் அரசை வலியுறுத்தும் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளோம் என்பதையும் குறிப்பிடுகின்றோம். இவ்வாறு உலகத் தமிழர் இயக்கம் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


Gallery
ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, Markham, Canada

10 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

09 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Mississauga, Canada

14 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Montreal, Canada, Laval, Canada

14 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Tillsonburg, Canada

14 Dec, 2024
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், கொழும்பு, யாழ்ப்பாணம், மிருசுவில், கனடா, Canada

14 Dec, 2020
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Trappes, France

07 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம்

15 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், தையிட்டி, வண்ணார்பண்ணை

14 Dec, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், மலேசியா, Malaysia, கொட்டடி, Scarborough, Canada

12 Dec, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Brampton, Canada

10 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், உரும்பிராய்

06 Dec, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, மீசாலை கிழக்கு, Ottawa, Canada

13 Dec, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வவுனியா, சென்னை, India

29 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020