சுவிஸ் தூதரக சந்திப்பு விவகாரம்: கஜேந்திரகுமார் வழங்கிய விளக்கம்
சுவிட்சர்லாந்து தூதரக ஏற்பாட்டில் நடைபெற ஏற்பாடான சந்திப்புக்கு எந்தவித சந்திப்பு எந்த விதத்திலும் நாங்கள் இடைஞ்சலாக இருக்கவில்லை என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 19ஆம் திகதி தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் ஒழுங்குபடுத்தப்பட்ட விசேட சந்திப்பு தமிழ் தேசிய பேரவையின் கூட்டம் காரணமாக காலவரையறை குறிப்பிடாது தற்காலிகமாகத் தள்ளிவைக்கப்பட்டதாக வெளியான செய்தி தொடர்பில் கஜேந்திரகுமார் நேற்று யாழில் ஊடக சந்திப்பை நடத்தினார்.
மேலும் தெரிவிக்கையில்,
சுவிஸ் தூதரகம்
“ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் தவறானது. இன்றைய தினம் சுவிஸ் தூதரகத்தை தொடர்பு கொண்டு நேரடியாக இதனை கேட்டேன்.
அதை அவர்கள் முற்று முழுதாக மறுத்தார்கள். நாங்கள் அந்த முயற்சியை கைவிடவில்லை.

அந்த செய்தி வெளிவருவதன் ஊடாக அதில் கலந்து கொள்ளும் தரப்புகளுக்கு பிரச்சினைகள் வருமோ என்ற ஒரே ஒரு சிந்தனையை தவிர வேறு எந்த ஒரு பிரச்சினையும் இருக்கவில்லை.
அந்த 19ஆம் திகதிக்குரிய சந்திப்பு முயற்சிகள் தற்போது உறுதிப்படுத்த முடியாத இடத்தில் இருக்கிறது என்று சொல்லப்பட்டது. நானே சுவிஸ் அரசாங்கத்திற்கு கேட்டு இந்த முயற்சி மேற்கொண்டதாக ஒரு செய்தி பரப்பப்பட்டது.
அதுவும் தவறான கருத்து. இலங்கை தமிழ் அரசுக் கட்சியியினுடைய சுமந்திரன் தான் சுவிஸ்லாந்து தூதரகத்தை கேட்டு இந்த சந்திப்பை ஏற்படுத்தினார்.
அதே தரப்பு, 15 ஆம் திகதி தமிழ் தேசியப் பேரவை குறிப்பாக நான் இது விடயம் சம்பந்தமான ஒரு கூட்டம் ஒன்றை ஒழுங்கு செய்திருப்பதாகவும் எங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் காரணமாக இரண்டு கூட்டங்கள் அவசியம் இல்லை.
தங்களுக்கு இது சம்பந்தமாக குழப்பமாக இருப்பதால் தங்களுக்கு உரையாடலில் கலந்து கொள்வது சம்மந்தமாக உறுதிப்படுத்த முடியாத என்ற கருத்தை சொல்லியிருந்தார். இதுவே உண்மை” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |