யாழில் துப்பாக்கிசூட்டில் பலியான சிறுவன் பயணித்த வாகனத்திலிருந்து மீட்கப்பட்ட வாள்
Jaffna
Sri Lanka Police Investigation
Death
Gun Shooting
By Kajinthan
சமிக்ஞையை மீறி சென்றதாக கூறி இன்று அதிகாலை அல்லைப்பட்டி பகுதியில் வைத்து, ஹையேஸ் வாகனம் ஒன்றின் மீது ஊர்காவல்துறை காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் வட்டுக்கோட்டை - சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்தான்.
இந்நிலையில் குறித்த வாகனத்தில் இருந்து வாள் ஒன்று காவல்துறையினரால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் கைதான இளைஞர்களுக்கு நீதிமன்றின் உத்தரவு
இந்த சம்பவத்தின் போது மேலும் இரண்டு இளைஞர்கள் குறித்த வாகனத்தில் இருந்த நிலையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவர்களை 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி