தையிட்டி விகாரையை உடைக்க திரளும் தமிழர் தரப்பு! அறிவிப்பை விடுத்தார் அடைக்கலநாதன்
யாழ்.தையிட்டி விகாரை உடைக்கப்படவேண்டியதுடன் அதற்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டத்திற்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி முழுமையான ஆதரவு வழங்கும் என்று அந்த கூட்டணியின் முக்கியஸ்தரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) தெரிவித்துள்ளார்.
ஐனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் இன்று (10) இடம்பெற்றுள்ளது.
அதன்பின்னர், இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்ட விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
முழுமையான ஆதரவு
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவித்ததாவது, “யாழ்.தையிட்டி விகாரைக்கு எதிராக இடம்பெறும் போராட்டத்திற்கு ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முழுமையான ஆதரவை தெரிவிக்கும்.
அது உண்மையில் உடைக்கப்படவேண்டிய விடயம். வடகிழக்கில் பிக்குகள் மற்றும் சில திணைக்களங்கள் நினைத்ததை செய்யும் ஒரு நிலை காணப்படுகின்றது.
எனவே இந்த விகாரை உடைக்கப்படவேண்டும் என்பதே எமது
நிலைப்பாடு. அதற்கான ஆதரவை நாங்கள் வழங்குவோம் மக்களுடைய விருப்பமும் அதுவே.”
என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)