தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி : வரலாற்றில் முக்கிய தருணம் - கரி ஆனந்தசங்கரி
கனடா (Canada) - பிரம்டனில் திறக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி எங்கள் கூட்டு வரலாற்றில் முக்கியமான ஒரு தருணமாகும் என கனடாவின் நீதியமைச்சர் கரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) தெரிவித்துள்ளார்.
நீதியமைச்சரின் முகநூல் பக்கத்தில் பதிவொன்றை வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் தமிழின அழிப்பால் உயிரிழந்தவர்கள், மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக உருவாக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி இன்றைய தினம் கனடா - பிரம்டன் நகரில் சிங்காவுசி பூங்காவில் திறந்து வைக்கப்பட்டது.
தமிழின அழிப்பு நினைவகம்
தமிழின அழிப்பு நினைவகம் என்ற பெயரில் அமைந்துள்ள இந்த நினைவுத்தூபியை பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுண் திரைச்சீலை நீக்கி உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
இந்நிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள கனடாவின் நீதியமைச்சர் கரி ஆனந்தசங்கரி, “ பிராம்ப்டனில் இன்று தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் திறக்கப்படுவது நமது கூட்டு வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தைக் குறிக்கிறது.
இலங்கை அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையின் போது கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவி உயிர்களுக்கு இந்த நினைவுச்சின்னம் ஒரு நினைவுச்சின்னமாக நிற்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்த விடயங்களை கீழ் உள்ள இணைப்பில் காண்க...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
