பிரித்தானியாவில் மனைவியை கொன்ற ஈழத்தமிழருக்கு 29 ஆண்டு சிறை!

Sri Lanka Law and Order World
By Kanooshiya Jan 17, 2026 02:58 PM GMT
Report

பிரித்தானியாவில் கடந்த ஆண்டு ஈழத்தமிழ்பெண் ஒருவர் அவரது கணவரால் மிக குருரமாக கத்தியால் குத்திக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கொலைக்குற்றவாளியான நிமலராஜாவுக்கு 29 ஆண்டுகால சிறைத்தண்டனை நேற்று (16.01.2026) விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மூன்று குழந்தைகளின் தாயான 44 வயதான நிலானி அவரது 47 வயதுடைய கணவரான நிமலராஜாவால் குருரமாக கொல்லபட்ட சம்பவம் புலம்பெயர் தமிழ்மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதன்படி, நிமலராஜாவுக்கு லிவர்பூல் நீதிமன்றத்தில் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

புதிய பயங்கரவாத சட்டம்: தமிழர்களின் கூட்டு நிலைப்பாடு தொடர்பில் கலந்துரையாட அழைப்பு!

புதிய பயங்கரவாத சட்டம்: தமிழர்களின் கூட்டு நிலைப்பாடு தொடர்பில் கலந்துரையாட அழைப்பு!

தனிப்பட்ட தகராறு

குடும்ப தகராறுகள் காரணமாக ஏற்கனவே தனது மனைவியுடன் தொடர்பு கொள்வதற்கு காவல்துறை நிமலராஜாவுக்கு தடை விதித்தால் அவரது மனைவி அவரை குடும்பவிழா ஒன்றுக்கு அழைக்கவில்லை.

பிரித்தானியாவில் மனைவியை கொன்ற ஈழத்தமிழருக்கு 29 ஆண்டு சிறை! | Tamil Man Who Killed Wife In Britain

இதனால் கோபம் கொண்ட நிமலராஜா இந்த குருரக்கொலையில் ஈடுபட்டுள்ளார்.

தனது மனைவியை குத்திக்கொல்வதற்காக அங்காடியொன்றில் கத்தி ஒன்றை வாங்கிய நிமலராஜா அதனை ஒரு பையில் போட்டு மறைத்து பேருந்து ஒன்றில் ஏறி தனது மனைவி பணிபுரியும் கடைக்கு சென்று அங்கு வைத்து அவரை குத்திக்கொலை செய்துள்ளார்.

தனது தாய் தனது தந்தையால் குத்தப்படும் சம்பவத்தை அவரது 17 வயதான மகளும் நேரடியாக பார்த்திருந்தார்.

அதன் பின்னர், கைது செய்யபட்ட நிமலராஜா மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு லிவர்பூல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.

கொல்லப்பட்ட நிலானியின் உடலில் 14 கத்திக்குத்து காயங்களும் நான்கு வெட்டுக்காயங்களும் இருந்த நிலையில் இது ஒரு வன்மத்துடன் திட்டமிட்ட கொலை என்பது நிருபிக்கப்பட்டு அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தண்டனையை அறிவித்த நீதிபதி நிமலராஜா குறைந்தபட்ச தண்டனைக்கு பின்னர் விடுதலை செய்யப்படக்கூடாது எனவும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

சிறப்பாக நடந்தேறிய லங்காசிறியின் “நம்மவர் பொங்கல்”: ஆதரவு வழங்கிய நல்லுள்ளங்களுக்கு நன்றி!

சிறப்பாக நடந்தேறிய லங்காசிறியின் “நம்மவர் பொங்கல்”: ஆதரவு வழங்கிய நல்லுள்ளங்களுக்கு நன்றி!

யாழில் அனுர வரிசையில் தையிட்டி பிக்கு : புத்தர்சிலை பிக்கு உண்ணாநிலை நாடகம் முடிவு!

யாழில் அனுர வரிசையில் தையிட்டி பிக்கு : புத்தர்சிலை பிக்கு உண்ணாநிலை நாடகம் முடிவு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026