தமிழினப் படுகொலை ஆவணக் கையேடு ஜேர்மனியில் வெளியீடு
germany
published
tamil massacre document
By Sumithiran
சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழினப்படுகொலை சம்பவங்களை ஆதாரங்களுடன் நான்கு மொழியில் நவீன வடிவமைப்பில் தொகுக்கப்பட்ட தமிழினப் படுகொலை ஆவணக் கையேடு வெளியீட்டு நிகழ்வு ஜேர்மனியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
நேற்று சனிக்கிழமை ஜேர்மனியின் வரண்டோவ் என்ற நகரில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
ஜேர்மனியில் பிறந்த இளைய தலைமுறையைச் சேர்ந்த சட்டத்துறை பயிலும் செல்வி ப.தாட்சாயினி அவர்களினால் ஒருவருடத்திற்கு மேலாகச் சேகரிக்கப்பட்ட தகவல்கள் அடங்கிய ஆவணப் பெட்டகம் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழின உணர்வாளர்கள் , அரசியல் தலைவர்கள்,ஜேர்மன் கட்சிசார், மற்றும் மனிதவுரிமைசார்
பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.