ஆட்சியை நெருங்கும் விஜய் - வீட்டிற்கு உச்சக்கட்ட பாதுகாப்பு: ஸ்டாலின், உதயநிதி பின்னடைவு
சென்னை நீலாங்கரை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள விஜய் வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக இந்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழகத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்களிப்பு கடந்த 23-ம் திகதி நடைபெற்ற நிலையில் இன்று காலை முதல் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
தமிழ்நாடு தமிழக சட்டமன்றத் தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆரம்ப கட்டத்திலிருந்தே முன்னிலை வகித்து வருகிறது.
தவெக முன்னிலை
தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தவெக முன்னிலையில் உள்ளது.

அந்த வகையில், முற்பகல் 11 மணியளவில் தவெகவின் விஜய் 108 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
அதிகமுக 71 இடங்களையும், ஸ்டாலின் தலைமையிலான திமுக 56 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தில் போட்டியிட்ட விஜய், செங்கோட்டையன், ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, பிரபு உள்ளிட்டவர்கள் முன்னிலைப் பெற்றுள்ளனர்.
அதேநேரம், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் 31 அமைச்சர்கள் ஆரம்ப கட்டத்தில் பின்னடைவை சந்தித்துள்ளனர். இந்த எதிர்பாராத திருப்பம் திமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு பணி
இந்த வெற்றியின் தொடர்ச்சியாக, சென்னை நீலாங்கரை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள விஜய் இல்லத்தின் முன்பு குவிந்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், விஜய் இல்லத்திற்குச் செல்லும் வீதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, வாகன போக்குவரத்து முறைப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக காவல்துறையினருடன் இராணுவத்தினர் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |