உள்ளூராட்சி மன்றங்களில் தமிழ் கட்சிகளே ஆட்சி அமைக்கும் : சித்தார்த்தன் பகிரங்கம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நாங்கள் பல சபைகளை கைப்பற்றுவதற்கு ஏதுவான நிலை காணப்படுகின்றதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் (Dharmalingam Siddarthan) தெரிவித்துள்ளார்.
அத்துடன் சபை அமைக்கின்றபோது தமிழ் கட்சிகள் சேர்ந்துதான் சபை அமைக்கின்ற நிலைமை காணப்படுகின்றதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
யாழ் ஸ்கந்தவரோதயா கல்லூரியில் இன்று (06) தனது வாக்கினை அளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஜேவிபியிற்கு ஆதரவு குறைவு
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”தமது உள்ளூர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பொருத்தமான நபரை தெரிவு செய்வதற்காக மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபடுகின்றனர்.
அந்தவகையில் எமது கட்சியை பொறுத்தவரை வெற்றிக்கான வாய்ப்புகள் எங்குமே பிரகாசமாக காணப்படுகிறது. பல சபைகளை நாங்கள் கைப்பற்றுவதற்கு ஏதுவான நிலை காணப்படுகிறது.
இன்றைய சூழ்நிலையில் ஜேவிபியிற்கு வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுகிறது.
சபை அமைக்கின்றபோது தமிழ் கட்சிகள் சேர்ந்துதான் சபை அமைக்கின்ற நிலைமை காணப்படுகிறது. இதுவே நடக்கும் என நினைக்கிறேன்" என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
