படைகளின் ஆக்கிரமிப்பை தடுக்க அணிதிரளுங்கள்: சரவணபவன் அறைகூவல்
பௌத்த – சிங்கள பேரினவாத நிகழ்சி நிரலை முன்னெடுக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் அனைத்து திணைக்களங்களும், தமிழர் தாயகத்தை கபளீகரம் செய்வதிலேயே குறியாக இருக்கின்றன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
அதன் ஓர் அங்கமாக காரைநகரில் கடற்படையினருக்கு காணி சுவீகரிக்கும் நடவடிக்கை எதிர்வரும் 12ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் அதை முறியடிக்கும் வகையில் அனைவரும் அன்று காலை 8 மணிக்கு அணிதிரளவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில், “போரைக் காரணம் காட்டி தாயகத்தில் நிலைகொண்ட சிறிலங்காப் படைகள் தற்போது அந்தக் காணிகளை நிரந்தரமாகச் சுவீகரிக்க முயல்கின்றன.

விடுதலை புலிகளின் தலைவர் ஒரு நேர்மையான போராளி : எதிரியே பாராட்டும் தலைவர் என்கிறார் மனோ கணேசன்! (காணொளி)
சர்வதேசத்தை ஏமாற்றும் வேலை
காணிகளை விடுவிப்போம் என அதிபர் ரணில் விக்ரமசிங்க கூறினாலும் அவரது கருத்து செயலுருப்பெறவில்லை.வெறுமனே சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காகவே அவர் அப்படி கூறுகின்றார்.
சிறிலங்கா அரச இயந்திரந்தின் ஒவ்வொரு திணைக்களங்களும் தமிழர் தாயகத்தை எப்படி வல்வளைப்புச் செய்யலாம் என்பதிலேயே குறியாக இயங்குகின்றன.
அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோரத்தை வன உயிரிகள் திணைக்களம் சுவீகரிப்பதற்கான முயற்சிகளை ஆரம்பித்திருக்கின்றது.
தமிழ் மக்களின் காணி
இதேபோல காரைநகர் நீலங்காட்டு சந்தியில் கடற்படையினரின் முகாமுக்காக தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமிப்பதற்கு எதிர்வரும் 12ஆம் திகதி நில அளவீடு முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
எமது அப்பு ஆச்சியர் ஆண்ட மண்ணை அந்நியரிடம் இழக்க முடியாது. நிலத்தை மீட்டுக்கும் இந்தப் போராட்டத்தில் அந்தக் காணி உரிமையாளர்கள் மாத்திரமல்ல பொதுமக்களும் பங்கேற்று ஆதரவு தரக்கோருகின்றேன்”என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
