மக்கள் கைதட்டியதால் தலைவர் கோபப்பட்டாரா.... சுதுமலை உரைக்கு இன்று 39 ஆண்டு
தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் அறுதரப்புக் கூட்டணியால் தென்னிலங்கையில் தவறான புரிதல்கள் ஏதும் ஏற்படாதவாறு கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்கள் என நேற்று நேரடியாகவே அந்தக்குழுவிடம் சிறிலங்காவின் அரசதலைவர் குறிப்பிட்டமை கொஞ்சம் நெருடலுக்குரிய விடயமாகியது.
இதேபோலவே நேற்றைய சந்திப்புகளில் பங்கெடுத்த இந்த 6 கட்சிகளுக்கு உள்ளே குடுமிப்பிடிகள் இருப்பதை அவர்களின் அரைகுறை பிரசன்னங்கள் வெளிப்படுத்தியுள்ளன. இன்று இதே 6 கட்சிகள் வீட்டுப்பாடத்துடன் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்துள்ளன.
இற்றைக்கு 39 வருடங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சுதுமலை அம்மன் கோவில் முன்றலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னால் உரையாற்றிய ஓகஸ்ட் 4 இல் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
சுதுமலையில் ஆயுதக் களைவு குறித்து தலைவர் பிரபாகரன் அறிவித்தபோது மக்களிடம இருந்து எழுந்த ஆரவாரமான கரவொலி அவரை சீற்றப்படுத்தியதாகவும் மக்கள் நன்றி மறந்தவர்கள் என விடுதலைப்புலிகளின் தளபதிகள் அப்போது சீற்றமடைந்ததாகவும் இப்போது புதிய கதைகள் செருகப்படுகின்றன.
நம்பகமான பாதுகாப்பு உத்தரவாதமின்றி ஆயுதக்களைவு எவ்வாறு போராட்ட அமைப்புகளுக்கு சிக்கலாகும் என்பதை 39 வருடங்களுக்கு முன்னர் தமிழர்களின் கண்டுகொண்ட கசப்பான வரலாற்றின் பின்னணியில் இப்போது பலஸ்தீனர்களின் ஹமாஸ் அமைப்பும் அமெரிக்க அரசதலைவர் உருவாக்கிய பலஸ்தீன சமாதான சபையிடம் ஆயுதக்களைவுக்கு ஒப்புப்கொண்ட செய்தி வந்துள்ள நிலையில் இந்தவிடயங்களை தழுவி வருகிறது செய்திவீச்சு
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |