சமாதான ஒப்பந்தம் இருந்தபோதுதான் அமைதித் தளபதி தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டார்…

Sri Lanka Government Of Sri Lanka Srilankan Tamil News
By Theepachelvan Nov 02, 2023 04:20 AM GMT
Theepachelvan

Theepachelvan

in கட்டுரை
Report
Courtesy: தீபச்செல்வன்

அன்று, போர் சூழ் நிலமென இருந்தது எம் தேசம். தொண்ணூறுகளின் நடுவில் தமிழ் ஈழம் மிகப் பெரிய இனவழிப்புப் போரைச் சந்தித்தது. எல்லா முனைகளிலும் இடப்பெயர்வு.

எல்லா பக்கங்களினாலும் தடைகளும் தாக்குதல்களும் என்று மக்கள் பெருந் துயரை அனுபவித்த காலம். மரங்களும் காடுகளும் எமக்கு வீடுகள் ஆனது. ஆனாலும் விடுதலைக்காக மக்கள் அணி திரள்வதில் இன்னுமின்னும் எழுச்சி கொண்டிருந்தனர்.

தொண்ணூறுகளின் இறுதியிலும் இரண்டாயிரத்தின் துவக்கத்திலும் போர்க்கள வெற்றிகளால் புலிகள் தமது பலத்தை வெளிப்படுத்தியதுடன், கூடவே சமாதான வழியில் தீர்வு காணும் தங்கள் நல்லெண்ணத்தையும் வெளிப்படுத்தி இருந்தனர்.

இடியுடன் கூடிய கன மழை: பொதுமக்களுக்கு வெளியாகிய எச்சரிக்கை

இடியுடன் கூடிய கன மழை: பொதுமக்களுக்கு வெளியாகிய எச்சரிக்கை


சமாதானத்தின் நிழல்

இந்த நிலையில் தான் 2002ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் சமாதான உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. 2001ஆம் ஆண்டு மார்கழி 19ஆம் திகதி இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

சமாதான ஒப்பந்தம் இருந்தபோதுதான் அமைதித் தளபதி தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டார்… | Tamilchelvan Was Killed When Peace Agreement

முதலில் முப்பது நாட்கள் போர் நிறுத்திற்கு விடுதலைப் புலிகள் அமைப்பு இணங்கி அறிவித்தது. இலங்கை அரசும் அதன் படைகளும் அதனை வரவேற்று தாமும் தாக்குதல்களை நடாத்தாமல் தவிர்த்தன.

பின்னதாக காலவரையறையற்ற போர் நிறுத்தத்தை புலிகள் அறிவித்த நிலையில், இலங்கை அரசும் விடுதலைப் புலிகளின் ஆட்சிப் பகுதி மீதான பொருளாதாரத் தடையை நீக்கியது.


2002ஆம் ஆண்டு மாசி மாதம் 22ம் திகதி நிரந்தரமான போர் நிறுத்த ஒப்பந்தம் எழுத்துமூலமாக மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை தளர்த்தவும் இலங்கை அரசு இணங்கியது.

இந்த நிலையில் இலங்கை நாட்டின் காட்சிகள் மாறத் துவங்கின. தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் தடையின்றி பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் தமது ஆட்சி நிலத்தில் கொண்ட பலமும் வடக்கு கிழக்கு முழுவதும் அவர்களுக்கு இருந்த இடமும் சமாதான காலத்தில் இலங்கை அரசுக்கும் உலகிற்கும் நன்கு தெரியும் சூழலும் உருவானது.

சுங்கத்துறையினரால் கைப்பற்றப்பட்ட வாகனங்களை தடுத்து வைக்க தடை உத்தரவு

சுங்கத்துறையினரால் கைப்பற்றப்பட்ட வாகனங்களை தடுத்து வைக்க தடை உத்தரவு


புலிகளின் புன்னகை முகம்

சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான பல்வேறு கட்ட முயற்சிகள் சந்திப்புக்கள் அக்கால கட்டத்தில் நிகழ்ந்தன. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை சமாதான தூதுவர்களை சந்தித்த அதேவேளையில் அவர்களை அழைக்கும் புன்னகை முகமாகவும் தமிழ்ச்செல்வன் அவர்கள் முன்னிலை பெற்றார்.

சமாதான ஒப்பந்தம் இருந்தபோதுதான் அமைதித் தளபதி தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டார்… | Tamilchelvan Was Killed When Peace Agreement

தலைவர் பிரபாகரன் இல்லாத இடத்தில் விடுதலைப் புலிகளின் முக்கிஸ்தர்களுடன் தமிழ்ச்செல்வனும் சந்திப்பில் முக்கியத்துவம் பெற்றார். அத்துடன் விடுதலைப் புலிகளின் சமாதான ஈடுபாடு தொடர்பிலும் விடுதலைப் புலிகளின் அரசியல் நிலைப்பாடு தொடர்பிலும் கருத்துக்களை மிகவும் சாதுரியமான வகையில் தமிழ்ச்செல்வன் பேசிவந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளராக தமிழ்ச்செல்வன், விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மறைவுக்குப் பிறகு நடந்த பேச்சுவார்த்தையில் தலைமை ஏற்றமையும் குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா அரசியல்வாதிகளையும் தென்னிலங்கைத் தமிழ் தலைவர்களையும் இஸ்லாமியத் தலைவர்களையும் வரவேற்ற தருணங்களிலும் தமிழ்ச்செல்வன் உடனிருந்தார்.

அத்துடன் அவரின் புன்னகை முகம் பன்னாட்டு சமாதான தூதுவர்களை பூங்கொத்து கையளித்து வரவேற்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான முகமாக தமிழ்ச்செல்வன் அவர்கள் அக்கால அரசியலில் முக்கியம் பெற்றிருந்தார்.

இன்று முதல் நடைமுறைக்கு வரும் புதிய நியமனங்கள்

இன்று முதல் நடைமுறைக்கு வரும் புதிய நியமனங்கள்


யார் இந்த தமிழ்ச்செல்வன்?

ஈழத்தின் யாழ்ப்பாணத்தின் தென்மராட்சிப் பகுதியில் சாவகச்சேரியில் 1967இல் பிறந்தவர் தமிழ்ச்செல்வன். சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற இவர் 1984இல் இளம்வயதில் போராளியாக இணைந்தார்.

சமாதான ஒப்பந்தம் இருந்தபோதுதான் அமைதித் தளபதி தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டார்… | Tamilchelvan Was Killed When Peace Agreement

ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளின் கீழ்மட்டப் போராளியாக செயற்பட்ட இவர், 1987இல் தென்மராட்சிக் கோட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். 1991இல் யாழ் மாவட்ட சிறப்புத் தளபதியாக செயற்பட்ட இவர், பல்வேறு போர் நடவடிக்கைளில் மிகவும் திறம்படச் செயல்பட்டிருந்தார்.

இதேவேளை 1993இல் பூநகரி மீட்புச் சமரான தவளைப் பாய்ச்சலில் காலில் காயமடைந்தார். இந்த நிலையில் 1993ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளராக சு.ப. தமிழ்ச்செல்வன் நியமிக்கப்பட்டிருந்தார்.

அத்துடன் வீரமரணம் அடையும் வரையில் விடுதலைப் புலிகளின் முக்கிய காலகட்டத்தில் இவர் அரசியல் துறைப் பொறுப்பளராக செயற்பட்டார் என்பதும் புலிகளின் கீழ்மட்டப் போராளியாக தனது போராட்ட வாழ்க்கையை துவங்கி புலிகளின் உயர்மட்ட பொறுப்பாளராக பணியாற்றியிருந்தார் என்பதும் சிறப்பாக குறிப்பிட வேண்டியதாகும்.

2002இல் துவங்கிய சமாதானப் பேச்சுக்களில் புலிகள் தரப்பின் முக்கியஸ்தராக இவர் பங்கேற்றதுடன் இறுதிப் பேச்சுவார்த்தையில் தலைமைப் பதவி வகித்தமையும் குறிப்பிடத்தக்கது.

சிரேஷ்ட அரச அதிகாரிகளுக்காக வெளியிடப்பட்ட புலமைப்பரிசில் திட்டம்

சிரேஷ்ட அரச அதிகாரிகளுக்காக வெளியிடப்பட்ட புலமைப்பரிசில் திட்டம்


சமாதானத்தின் கோர முகம்

2002களில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் துவங்கிய நிலையில், சமாதானம் தீர்வு தரும் என்றும் சமாதானம் அமைதி தரும் என்றும் ஈழ மக்கள் பெருமளவில் நம்பியிருந்தனர். ஆனாலும் சமாதான காலத்தில் இலங்கை அரச படைகள் பல்வேறு மீறல்களில் ஈடுபட்டன.

சமாதான ஒப்பந்தம் இருந்தபோதுதான் அமைதித் தளபதி தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டார்… | Tamilchelvan Was Killed When Peace Agreement

விடுதலைப் புலிகள் இயக்கம்மீது மாத்திரமின்றி, பொதுமக்கள்மீதும் பல்வேறு ஒடுக்குமுறைகளை மேற்கொண்டிருந்தன. அத்துடன் இராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை பலவீனப்படுத்தும் முயற்சிகளிலும் ஈடுபட்டன.

சிறிலங்காவின் சமாதான தூதுவர் என்று முகம் காட்டிய அன்றைய பிரதமரும் இன்றைய அதிபருமான ரணில் விக்ரமசிங்க விடுதலைப் புலிகள் அமைப்பை பிளவுபடுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இதேவேளை சமதான காலத்தில் விடுதலைப் புலிகளின் பகுதிகளுக்கும் ஊடுருவி வேவுபார்த்த இலங்கை இராணுவ உளவாளிகள் விடுதலைப் புலிகளின் இராணுவ பலத்தையும் அவர்களின் கட்டமைப்பையும் எவ்வாறு அழிக்கலாம் என்றும் திட்டம் தீட்டினர்.

சமாதான காலத்தை போருக்கு தயார்ப்படுத்தும் ஒரு காலமாகவே  சிறிலங்கா அரசு பயன்படுத்தியது. இதனால் சமாதானத்தின் வழியாக தீர்வை காண்பதில் அக்கறையின்றி செயற்பட்டதுடன் சமாதான காலத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம்மீது பல்வேறு தாக்குதல்களும் இடம்பெற்றிருந்தன. ஈற்றில் ஒருதலைபட்சமாக இலங்கை அரசு சமாதான ஒப்பந்தத்தை முறித்தது.

117 வீதத்தால் அதிகரித்த இலங்கையின் இளநீர் ஏற்றுமதி

117 வீதத்தால் அதிகரித்த இலங்கையின் இளநீர் ஏற்றுமதி


அமைதியைக் கொன்று துவங்கிய போர்

இந்த சூழலில்தான் 2006ஆம் ஆண்டில் நான்காம் ஈழப் போர் துவங்கியது. சமாதானம் அமைதியையும் நிம்மதியான வாழ்வையும் தரும் என்று நம்பியிருந்த காலத்தில் சமாதானம் தன் கோர முகத்தை, தன் உண்மை முகத்தை காட்டத் துவங்கியது. 

சமாதான ஒப்பந்தம் இருந்தபோதுதான் அமைதித் தளபதி தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டார்… | Tamilchelvan Was Killed When Peace Agreement

அக் கால கட்டத்தில் செஞ்சோலைப்படுகொலை போன்ற விமானத் தாக்குதல்களால் ஈழமண் பெரும் அழிவுகளையும் சோகங்களையும் கண்டது. எனினும் சமாதான வழியில் தீர்வு காணவும் மக்களின் மனிதாபிமான தேவைகளை நிறைவேற்றவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் குரலாக தமிழ்ச்செல்வன் அவர்களின் குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது.

என்றபோதும் தடைகளை விதிப்பதிலும் பாதைகளை மூடுவதிலும் விமானத்தாக்குதல்களை நடாத்துவதிலும் மக்களை கொன்றழிப்பதிலும் தான் இலங்கை அரசு தீவிரமாக இருந்தது.

இந்தச் சூழலில்தான், 2007ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் நாளன்று, இலங்கை விமானப் படை நடாத்திய தாக்குதலில் தமிழ்ச்செல்வன் அவர்களும் ஐந்துபோராளிகளும் வீரச்சாவை தழுவிக்கொண்டனர்.

அமைதியின் போராளியாக விடுதலைப் புலிகளின் சமாதானத் தூதுவராக செயற்பட்ட வெள்ளை உடை அணிந்த வெண் புண்ணகை கொண்ட தமிழ்ச்செல்வன் என்ற அமைதித் தளபதியை கொடிய போரில் கொன்றுவிட்டு சரியாக இரண்டு மாதங்களின் பின்னர், ஜனவரி 02ஆம் நாள், 2008ஆம் ஆண்டில், இலங்கை அரசு அதிகாரபூர்வமாக சமாதான ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டது.

ஈழத் தமிழரின் சமாதானக் குரலை, விடுதலைக் குரலை சிதைத்தது சிங்கள அரசு. சமாதானத்திலும் போரிலும் அறம்பிழைத்த ஓர் அரசு எம் நிலத்தின் அமைதித் தளபதியைக் கொன்றது. ஈழ நிலம் உள்ளவரை எம் நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது.

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 02 November, 2023 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி வடக்கு, Nürnberg, Germany

23 May, 2025
மரண அறிவித்தல்

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ப்றீமென், Germany

21 May, 2025
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம்

22 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, Toronto, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

அத்தியடி, கொடிகாமம், வவுனியா, Markham, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 2ம் வட்டாரம், Jaffna, புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

20 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

05 Jun, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

12 Jun, 2018
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், Bussy-Saint-Georges, France

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, Nienburg, Germany

24 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
13ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை சிறுவிளான்

24 May, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

24 May, 2020
மரண அறிவித்தல்

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, High Wycombe, United Kingdom, Buckinghamshire, United Kingdom

11 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom

18 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Columbuthurai, Markham, Canada

24 May, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Bremerhaven, Germany, Fribourg, Switzerland, Chennai, India

24 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், Munchen, Germany

15 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Coventry, United Kingdom

24 May, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சுன்னாகம், யாழ்ப்பாணம், London, United Kingdom

19 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Berlin, Germany

16 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

22 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
மரண அறிவித்தல்

கம்பர்மலை, London, United Kingdom

12 May, 2025
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Markham, Canada

22 May, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, யாழ்ப்பாணம், கொழும்பு, California, United States

19 May, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, மாவிட்டபுரம்

16 May, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020