C.M விஜய்யை யாழில் இறக்க அச்சு அரசியல்! மே 18 ஈகங்கள் Vs காளான்கள்!
இனப்படுகொலையென்பது ஈழத்தமிழினமாகிய எமக்கு மட்டும் உரியதல்ல. இந்த உலகம் பல கட்டங்களில் அதனை சந்தித்துள்ளது. நாம் இன்று துடிப்பதைப் போலவே பல தேசிய இனங்கள் பல வரலாற்றுக் கட்டங்களில் துடித்திருக்கின்றன.
எனினும் சில இனப்படுகொலைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட நீதி வழங்கப்பட்டது.சிலவற்றுக்கு நீதி மறக்கடிக்கபட்டது. சில இனப்படுகொலைகள் வல்லோன் வகுத்த விதியாக வரலாற்றில் மறைக்கபபட்டன.
ஈழத்தமிழர்களுக்கு இன்று மே 18 முள்ளிவாய்கால் நினைவேந்தல் கடக்கின்றது. ஒருதேசிய இனத்துக்கு இவ்வாறான கூட்டு நினைவேந்தல்கள் தேவையென்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஏனெனில் ஒரு மக்கட்கூட்டத்தின் ஆத்மபலத்தில் இவ்வாறான ஊழடடநஉவiஎந அநஅழசல எனப்படும் கூட்டு நினைவேந்தல்கள் காலம்காலமாக நிலைத்த நிற்கக்கூடியவை. வரலாற்றை மாற்றும்சக்திகொண்டவை.
தமிழர்களுக்கு இந்த பெரு அவலத்தை ஏற்படுத்தி பெருந்தேசியவாத மமதையை வெளிப்படுத்திய சிறிலங்காவின் மே19 போர்வீரர்கள் நினைவேந்தல் நாளை கடக்கவுள்ளது. இரண்டு தேசங்களும் இங்கு நினைவேந்தல் என்ற பதத்தைதான் பயன்படுத்திக்கொள்கின்றன. ஆனால் தமிழர்தாயகம் மற்றும் புலம்பெயர் நாடுகளில் கடக்கும் மே 18 பெருவலிக்குரியது.
இற்றைக்கு 17 ஆண்டுகளுக்குமுன்னர்ஒருதேசிய இனத்தின்மீது சாட்சிகள் அற்று நடத்திப்பட்ட மிககுருரமான நாசகாரஆட்டத்துக்குரிய பொறுப்புக்கூறலுக்கு கொழும்பு அதிகாரமையம் இன்னமும் தயாராகஇல்லை. 2024 இல் அந்த அதிகாரமையத்தில் சிஸ்ரம் சேஞ் அனுர தரப்பால் ஒரு முக்கிய ஆட்சிமாற்றம் ஏற்பட்டாலும் தமிழினத்துக்கு பொறுப்புக்கூறும் பொறுப்புக்கு எந்த சிஸ்ரம் சேஞ் எனப்படும் முறைமை மாற்றமும் வரவில்லை.
மாறாக நாளை தமது தேசத்தின் போர் வெ(ற்)றியின் 17வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் தேசிய வெற்றி நாள் நினைவு நாள் நிகழ்வுக்கு தலைமையேற்கும் அரசதலைவர் அனுர குமார திசாநாயக்கா ஒருவேளை அவர் முன்னைய ராஜபக்ச அதிகார மையமுகங்கள் முழங்கியதை போல இந்த விழாவில் போர்வெற்றி முழக்கங்களை எடுத்துவிடாமல் கமுக்கமாக இந்த நாளை கடக்கலாம் அவ்வளவுதான்.
மறுபுறத்தே முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு இன்றைய 17 வருட நினைவில் கூட கடந்தும் அதற்குரிய நீதியை அல்லது அதற்குரிய அரசியல் அடைவுகள் ஏதும் இல்லாமல் தமிழினம் உள்ளது.
முள்ளிவாய்கால் பேரவலத்துக்காக கோரப்படும் நீதி வெறுமனே அதற்குரிய குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றவிடயத்தில் மட்டும் சுற்றிச்சுழலவி;ல்லை. முள்ளிவாய்கய் நீதி, தமிழ் மக்கள் மீதான அரசியல வாழ்பு நோக்கிய பயணத்தின் அடைவுநிலைசார்ந்தது.
ஆனால் இந்த அடைவுநிலை போக்கு இப்போது சிறீதரன் விடயத்தை விசாரிக்க மூவர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்படுவதான தமிழரசு கட்சியின் மத்திய குழு தீர்மானித்ததான செய்திகள் முதல் தமிழகத்தின் புதிய முதல்வர் விஜய்யை சந்திக்கும் காட்சிகளுடன் மூலம் ஒரு அரசியல் செய்யத்துடிக்கும் தன்முனைப்புடன் ஓடோடித்திரியும் கிளாடியேற்றர் எம்பி ரக அதிர்வுகள் வரை வரும் நிலையில் இந்த விடயங்களை தழுவி வருகிறது செய்திவீச்சு...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |