தமிழர்கள் கனவு காணக் கூடாது! ஸ்ரீலங்கா அமைச்சர்
United Nations
Tamil National Alliance
Human Rights
By Vasanth
இலங்கையின் தேசிய பிரச்சினைகளுக்கு அரசு தான் தீர்வுகளை வழங்கும். அதைவிடுத்து சர்வதேச சமூகம் தீர்வைப்பெற்றுத் தரும் என்று வடக்கு கிழக்கு தமிழ் மக்களும், கூட்டமைப்பும் கனவு காணக்கூடாது என காணி விவகார அமைச்சரை் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தவே பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியை தமிழ், முஸ்லிம் மக்கள் முன்னெடுத்தனர்.
எனினும் இவ்வாறான பேரணிகளால் அரசை ஒருபோதும் பலவீனப்படுத்த முடியாதென அவர் தெரிவித்தார்.