பொதுவேட்பாளருக்கு வாக்களிக்குமாறு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் வேண்டுகோள்!

Sri Lankan Tamils P Ariyanethran Election Sri Lanka Presidential Election 2024 sl presidential election
By Shadhu Shanker Sep 17, 2024 09:49 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

தமிழர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளையும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கோரிக்கையினையும் இந்த நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் கொண்டுசெல்வதற்கு சிறந்த வாய்ப்பாக பொதுவேட்பாளர் காணப்படுகின்றார்.

இதனால் சங்கு சின்னத்திற்கும் பொதுவேட்பாளருக்கும் மட்டும் வாக்களிக்குமாறு கிழக்கு மாகாண வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இன்று காலை மட்டு.ஊடக அமையத்தில் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு (Batticaloa), அம்பாறை,திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவிகளினால் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பின் போது இவ்வாறு குறிப்பிடப்பட்டது.

யாழ். நூலகத்தை எரித்த போது ரசித்தவர் இன்று ஜனாதிபதி வேட்பாளர்...சந்திரசேகரம் சுட்டிக்காட்டு

யாழ். நூலகத்தை எரித்த போது ரசித்தவர் இன்று ஜனாதிபதி வேட்பாளர்...சந்திரசேகரம் சுட்டிக்காட்டு

 ஜனாதிபதி தேர்தல்

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்கள், எதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்காக எங்களுடைய தமிழ் உறுப்பினரை இதில் ஜனாதிபதியாக தெரிவு செய்திருக்கின்றார்கள்.

பொதுவேட்பாளருக்கு வாக்களிக்குமாறு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் வேண்டுகோள்! | Tamils Urged To Vote For Common Candidate

கடந்த 15 வருடங்களாக யுத்தம் முடிவுற்ற பிறகு எங்களுடைய உறவுகளுக்கு நீதி கேட்டு இந்த சிங்கள அரசின் தலைமைகள் ஊடாக எங்களுடைய உறவுகளை தேடி 15 வருடங்கள் கடந்துள்ளது.

இந்நிலையிலும் எந்த ஒரு துளியேனும் தங்களுக்கான தீர்வு வராத பட்சத்தில் நாங்கள் ஒவ்வொரு நாளும் கண்ணீரோடும் வேதனையோடும் இலங்கை அரசாங்கத்தின் நம்பிக்கை இல்லாமல் சர்வதேச ஒருமுறையை நோக்கி நாங்கள் பயணிக்கும் இந்த வேளையில் ஒரு தமிழராக தமிழினத்திற்காக சங்கு என்னும் நமது அடையாள சின்னத்தை நமக்காக எமது மக்களுக்காக அனைவரும் சேர்ந்து சேர்ந்து இந்த கட்டமைப்பை உருவாக்கி தமிழ் இனத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான ஒரு காலமாக இந்த ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ் வேட்பாளர் அரியநேத்திரன்   இந்த ஜனாதிபதி தேர்தலுக்கு சங்கு சின்னத்தில் போட்டியிடுவதற்காக நியமிக்கப்பட்டு இருக்கின்றது.

கொலைக்குற்றவாளிக்கு வாக்களிக்க கோரும் முதுகெலும்பில்லாத தமிழரசுக் கட்சி

கொலைக்குற்றவாளிக்கு வாக்களிக்க கோரும் முதுகெலும்பில்லாத தமிழரசுக் கட்சி

ஒடுக்கப்பட்ட இனம்

ஒடுக்கப்பட்ட இனமாக உரிமை மீறப்பட்ட ஒரு இனமாக அனைவரும் இந்த சங்கு சின்னத்திற்கு மாத்திரம் புள்ளடியிட்டு எங்களுடைய தமிழ் இருப்பை தக்க வைக்க வேண்டும்.

பொதுவேட்பாளருக்கு வாக்களிக்குமாறு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் வேண்டுகோள்! | Tamils Urged To Vote For Common Candidate

தமிழர்களாக நாங்கள் ஒருமித்த குரலோடு இந்த சங்கு சின்னத்துக்கு நேரே புள்ளடி இட்டு எங்களுடைய வலியையும் வேதனையையும் எங்களுடைய இருப்பையும் சர்வதேசத்திற்கு தெரிவிப்பதன் ஊடாக எமக்கான ஒரு தீர்வினை பெறுவதற்கும் நாங்கள் அனைவரும் ஒன்று திரண்டு இந்த சங்கு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்என்பதை இந்த நேரத்தில் ஒரு தமிழர்களாக பாதிக்கப்பட்ட ஒரு இனமாக வேதனை வலிகளில் இருக்கின்ற ஒரு இனமாக நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்.

எங்களுடைய உரிமை மீறப்படும் பட்சத்தில் எங்களுடைய உறவுகளின் நிலை அறியாத பட்சத்தில் நாங்கள் இன்று தமிழரை நோக்கி நிற்கின்றோம் நாங்கள் அறியனேந்திரன் அண்ணனுக்காக மாத்திரம் அல்லாது தமிழனின் இருப்பை தக்க வைக்கும் ஒரு சின்னமாக சங்கு சின்னத்திற்கு அனைத்து பொதுமக்களும் புள்ளடிட்டு அமோக வெற்றியை ஈட்ட வேண்டும்.

ஒட்டுமொத்த தமிழ் மக்கள் நாங்கள் அனைவரும் இன்று பாதிக்கப்பட்டு இருக்கின்றோம் எவ்வாறு என்றால் கோயில்கள் அபகரிப்பு நிலங்கள் அபகரிப்பு தமிழ் மக்களின் சொத்துக்களை முடக்குவது இதனை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

எங்களுக்கான நீதி

இந்த தருணத்தில் நாங்கள் அரியநேந்திரனை (P.ariyanethran) வரவேற்று அவரை இன்று தலைமுறைக்கு உள்ளோம் எங்களுக்கான நீதியை அவர் பெற்றுத் தர வேண்டும் என்று. பாதிக்கப்பட்ட சமூகமாக நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நாடாளுமன்றம் அனுப்பி எங்களுக்கான நீதியை சர்வதேச ஊடாக இவர் எங்களுக்கு பெற்றுத் தருவார் என்று தான் இவரை நாங்கள் நம்பி இருக்கின்றோம்.

பொதுவேட்பாளருக்கு வாக்களிக்குமாறு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் வேண்டுகோள்! | Tamils Urged To Vote For Common Candidate

அதுமாத்திரமல்ல நாங்கள் இவ்வளவு காலமும் 250க்கு மேற்பட்ட தாய்மாரை இழந்து இருக்கின்றோம் இதற்கு பிறகும் தருகின்றோம் என இழுத்தடித்து எங்களுடைய காலத்திற்குப் பின்னரும் இன்னமும் எங்களது இந்த போராட்டங்களை நழுவி நசுக்கி எங்களை முறியடிக்க விரும்பாதீர்கள்.

எங்களுக்கான நீதியை சர்வதேசத்தின் ஊடாக பெற்று தர எல்லோரும் முன்வர வேண்டும் நாங்கள் தேடுவது ஒரு உயிரைத்தான் தேடுகின்றோம் நிதியை கேட்கவில்லை நீதி ஒன்றையே நாங்கள் கேட்டு நிற்கின்றோம். இன்று நாங்கள் எத்தனை துன்பங்களுக்குள் அகப்பட்டு இன்று வெளியில் வந்திருக்கின்றோம் 21,000 பேர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டு இருக்கின்றார்கள்.

அவர்களுக்கு குடும்பங்களுக்கு என்ன நிலை என்று தெரியுமா இன்று எத்தனை பிள்ளைகள் வீதியில் இருக்கின்றனர் இறந்திருக்கின்றார்கள் தாய்மார் இல்லாமல் இருக்கின்றார்கள் இதற்கு காரணம் இலங்கை அரசாங்கமே எங்களுக்கான நீதியையும் ஒட்டுமொத்த தமிழரையும் அரியநேந்திரனுக்கு வாக்களித்து சங்கு சின்னத்திற்கு அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பது தமிழ் தேசியத்தை முடக்குவதற்கு சமம்! கஜேந்திரகுமார் எச்சரிக்கை

தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பது தமிழ் தேசியத்தை முடக்குவதற்கு சமம்! கஜேந்திரகுமார் எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்