ஓமான் கடற்பரப்பில் தாக்கப்பட்ட எண்ணெய்ப் தாங்கி கப்பல்...! அமெரிக்க முற்றுகையால் உச்சக்கட்ட பதற்றம்
ஓமான் கடற்பரப்பில், ஹோர்முஸ் நீரிணையின் (Strait of Hormuz) நுழைவாயிலுக்கு அருகில் பயணித்துக் கொண்டிருந்த எண்ணெய்ப் தாங்கி கப்பல் மீது அடையாளம் தெரியாத ஏவுகணை அல்லது எறிபொருள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியக் கடற்படையின் கடல்சார் வர்த்தகச் தொழிற்பாடுகள் பிரிவு (UKMTO) இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
ஓமானின் லிமா பகுதிக்கு வடகிழக்கே சுமார் 12 மைல் (20 கிலோமீற்றர்) தொலைவில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
கடுமையாகச் சேதம்
தாக்குதலில் கப்பலின் இயந்திர அறை (Engine Room) கடுமையாகச் சேதமடைந்துள்ளது.
தாக்குதலையடுத்துக் கப்பலைத் தன் கட்டுப்பாட்டில் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதிர்ஷ்டவசமாக இச்சம்பவத்தில் பணியாளர்கள் எவருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதலை நடத்தியது யார் என்பது குறித்த விவரங்களை UKMTO அமைப்போ அல்லது அதிகாரிகளோ இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை.
ஹோர்முஸ் நீரிணை
இதனிடையே, சனிக்கிழமையன்றும் ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் மற்றொரு எண்ணெய்ப் தாங்கி கப்பலின் மாலுமி, கப்பலுக்கு அருகே கடலில் பெரிய வெடிப்புச் சத்தத்துடன் நீர் எழும்பியதைக் கண்டுள்ளதாக UKMTO பிரிவு தெரிவித்துள்ளது.
எனினும், இச்சம்பவத்தில் கப்பலுக்கோ அல்லது ஊழியர்களுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இவ்விரு சம்பவங்களுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அத்தோடு அமெரிக்கா, ஈரானியத் துறைமுகங்களுக்கான கப்பல் போக்குவரத்திற்கு முற்றுமுழுதாகத் தடை மற்றும் முற்றுகை விதித்துள்ளதற்குப் பதிலடியாக, ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்தை முற்றாக முடக்கும் நடவடிக்கைகளை ஈரான் தீவிரப்படுத்தும் என ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்புக் சபையின் செயலாளர் முகமது பாகர் சோல்காத்ர் எச்சரித்திருந்தார்.
இந்தநிலையில் உலகின் மிக முக்கிய எண்ணெய் விநியோகப் பாதையான ஹோர்முஸ் நீரிணை வழியே சாதாரண நாட்களில் நாளொன்றுக்குச் சுமார் 130 கப்பல்கள் வரை பயணித்து வந்தன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை
வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்