யாழில் மாணவியை கண்டித்த ஆசிரியருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
ஐந்தாம் வகுப்பு மாணவி ஒருவரை கண்டித்த விவகாரம் தொடர்பில் பருத்தித்துறை (Point Pedro) காவல்துறையினரால் கைது செயப்பட்ட ஆசிரியரை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவியின் செயற்பாடு காரணமாக அவரை நல்வழிப்படுத்தும் வகையில் கண்டித்த ஆசிரியருக்கு எதிராக மாணவின் தாயாரால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆசிரியரை நேற்றுமுன் தினம் கைது செய்யப்பட்டிருந்தார்.
வழக்கு விசாரணை
இந்நிலையில், பருத்தித்துறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதன் பின்னர் காவல்துறை காவலில் தடுத்து வைக்கப்பட்டார்.
இதையடுத்து குறித்த ஆசிரியரை நேற்றைய தினம் (28) வெள்ளிக்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் பருத்தித்துறை காவல்துறையினர் முற்படுத்தியிருந்தனர்.
வழக்கை விசாரித்த நீதவான் நீதிமன்ற நீதவான் கிருஷாந்தன் பொன்னுத்துரை குறித்த ஆசிரியரை ஒரு ஆள் பிணையில் விடுவித்து உத்தரவிட்டதுடன் வழக்கு விசாரணையினை வரும் டிசம்பர் 5 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 6 நாட்கள் முன்
