ஆசிரியர் நியமனம் - அதிபர் ரணிலுக்கு இராஜாங்க அமைச்சர் முன்வைத்துள்ள கோரிக்கை!
பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கென பயிற்றப்பட்ட ஆசிரியர்களாக உள்வாங்கப்பட்ட 4000 ஆசிரியர் உதவியாளர்களில் 400 பேருக்கு இதுவரை ஆசிரியர் நியமனம் வழங்கப்படவில்லை.
பாதிக்கப்பட்டுள்ள 400 பேருக்கு உடனடியாக ஆசிரிய நியமனங்களை வழங்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாசலம் அரவிந்தகுமார் எழுத்து மூலமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
கோரிக்கை
"பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கென உள்வாங்கப்பட்ட 4,000 ஆசிரிய உதவியாளர்கள் உரிய பயிற்சிகளை நிறைவு செய்துகொண்டதன் பின்னர், பயிற்றப்பட்ட ஆசிரியர்களாக நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இருந்தபோதிலும், துரதிஷ்டவசமாக அவர்களில் 400 பேர் இதுவரை எந்தவொரு பாடசாலையிலும் நியமன ஆசிரியர்களாக உள்வாங்கப்படவில்லை என்பது கவலைக்குரியதாகும்.
ஆகவே, இந்த விடயத்தில் அதிபர் நேரடியாக தலையிட்டு குறித்த 400 பேரையும் ஆசிரியர்களாக உள்வாங்குவதற்கு ஆவன செய்ய வேண்டும்." என இராஜாங்க அமைச்சர் எழுத்து மூலமான கோரிக்கையை அதிபர் ரணிலுக்கு முன்வைத்துள்ளார்.
