கேள்விக்குறியாகும் அடுத்த நிமிடங்கள் : ஈரான் வெளியிட்ட பகீர் காணொளி
கடந்த சில நாட்களாக மத்திய கிழக்கில் ஈரான் (Iran) - இஸ்ரேல் (Israel) போர் பதற்றம் என்பது உலகமே உற்று நோக்கும் ஒன்றாக காணப்படுகிறது.
ஈரான் அணு ஆயுதத்தைத் தயாரித்துவிடுமோ என்கிற அச்சத்தில் ஜூன் 13 அன்று ஈரானின் அணுசக்தி தளங்கள் மற்றும் இராணுவ இலக்குகலை குறி வைத்து தாக்குதல் மேற்கொண்டது.
அதற்கு எதிர்வினையாற்றும் வகையில், இஸ்ரேலின் இராணுவத் தாக்குதல்களுக்கு நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி பதிலளித்தது ஈரான்.
வான்வழித் தாக்குதல்
ஜெருசலேம் (Jerusalem) மற்றும் டெல் அவிவ் மீது வெடிப்புகள் வானத்தை ஒளிரச் செய்தன, இது பரவலான பீதியையும் சேதத்தையும் ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து சனிக்கிழமை அதிகாலை இரண்டாவது அலை தாக்குதல்கள் ஜெருசலேம் முழுவதும் வான்வழித் தாக்குதலை மேற்கொண்டது.
புதிய காணொளி
இவ்வாறான பின்னணியில், தற்போது ஈரான் புதிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த காணொளியில், “உலகையே ஆச்சரியப்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்.” என தலைப்பிட்டு வெளியிட்டுள்ளது.
We are ready to surprise the world.pic.twitter.com/f514m0ZM1n
— Tehran Defence (@TehranDefence) June 16, 2025
முன்னதாக ஈரான் தனது ஆயுத பலத்தை காண்பிக்கும் வகையில் ஒரு காணொளியை வெளியிட்டு சில மணி நேரங்களிலேயே இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது ஈரான் வெளியிட்டுள்ள காணாளியின் பின்னால் எவ்வாறான அழிவுகள் இடம்பெற போகின்றன என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
