குருவிட்ட சிறைச்சாலைக்குள் மீண்டும் பதற்றம் - கண்ணீர்புகை பிரயோகம்
Sri Lanka Police
Ratnapura
Prisons in Sri Lanka
By Sathangani
இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலைக்குள் மீண்டும் சற்றுமுன்னர் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு (06) குறித்த சிறைச்சாலையில் பதற்றம் ஏற்பட்ட நிலையில் அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இன்று (7) காலை மீண்டும் அந்த சிறைச்சாலைக்குள் கைதிகளால் பதற்ற நிலை உருவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கண்ணீர்புகை பிரயோகம்
இந்நிலையில் குறித்த சிறைச்சாலையின் வைத்தியசாலைக்கும் கைதிகளால் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக காவல்துறையினரினால் கண்ணீர்புகை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி