தமிழக மீனவர்கள் கைதால் பதற்றம் : முதலமைச்சர் ஸ்டாலின் அவசர கடிதம்

Indian fishermen M K Stalin Dr. S. Jaishankar Sri Lanka Navy
By Sumithiran Jan 24, 2024 12:38 PM GMT
Report

"தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்படுவது கவலையளிப்பதாக உள்ளதாகவும் இந்த செயல் பதற்றமான சூழ்நிலையை உருவாக்கும் என்பதால், இதில் மத்திய அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது" என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் சிறிலங்கா கடற்படையினரால் ஜனவரி 22 அன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களையும், அவர்களது கடற்றொழில் படகுகளையும் விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (24) கடிதம் எழுதியுள்ளார்.

 சிறிலங்கா கடற்படையினரால்  கைது

அந்தக் கடிதத்தில், கடற்றொழில் படகுகளுடன் கடற்றொழிலுக்கு சென்றிருந்த நிலையில், ஜனவரி22 அன்று சிறிலங்கா கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீப காலமாக தமிழக மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்படுவது கவலையளிப்பதாக உள்ளது.

தமிழக மீனவர்கள் கைதால் பதற்றம் : முதலமைச்சர் ஸ்டாலின் அவசர கடிதம் | Tension Among Tamil Nadu Fishermen

இத்தகைய போக்கு பதற்றமான சூழ்நிலையை உருவாக்கும் என்பதால், இதில் மத்திய அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய தொடர் கைது நடவடிக்கைகள், தமிழ்ச் சமூகத்தின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பறிப்பதோடு, மீனவ மக்களிடையே அச்சத்தையும், நிச்சயமற்ற சூழலையும் உருவாக்கியுள்ளது.

பொருளாதார பயங்கரவாதிகளாகச் செயற்படுகின்றது ராஜபக்ச குடும்பம்!

பொருளாதார பயங்கரவாதிகளாகச் செயற்படுகின்றது ராஜபக்ச குடும்பம்!

பொருளாதாரக் கட்டமைப்பை அச்சுறுத்தும் வகையில்

தமிழகத்தைச் சேர்ந்த மீனவ சமூகங்களின் கலாசார மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண உரிய தூதரக வழிமுறைகளைப் பின்பற்றி தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தமிழக மீனவர்கள் கைதால் பதற்றம் : முதலமைச்சர் ஸ்டாலின் அவசர கடிதம் | Tension Among Tamil Nadu Fishermen

மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இந்தியா - இலங்கை நாடுகளுக்கிடையேயான கூட்டு நடவடிக்கைக் குழுவினை அமைப்பதன் மூலம் இது சாத்தியமாகும்.

45 ஆண்டுகளின் பின் மீண்டும் பூமியை கடக்கவுள்ள சிறுகோள் : நாசா வெளியிட்டுள்ள அறிவிப்பு

45 ஆண்டுகளின் பின் மீண்டும் பூமியை கடக்கவுள்ள சிறுகோள் : நாசா வெளியிட்டுள்ள அறிவிப்பு

அப்பாவி மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை

அப்பாவி கடற்றொழிலாளர்கள் தொடர்ந்து இதுபோன்று கைது செய்யப்படுவதைத் தவிர்க்கவும், இந்திய கடற்றொழிலாளர்களுக்கும், சிறிலங்கா கடற்படையினருக்கும் இடையே நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஏதுவாகவும், உரிய தூதரக வழிமுறைகளை மேற்கொண்டு கூட்டு நடவடிக்கைக் குழுவினை கூட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக மீனவர்கள் கைதால் பதற்றம் : முதலமைச்சர் ஸ்டாலின் அவசர கடிதம் | Tension Among Tamil Nadu Fishermen

இலங்கைக் காவலில் உள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விரைந்து விடுவித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த ரி 20 வீரர் யார் தெரியுமா..!

2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த ரி 20 வீரர் யார் தெரியுமா..!

இதேவேளை இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபடும்போதே சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

பதுளை, யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், Montreal, Canada

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025