பைடனின் பதவியேற்பு நிகழ்வுக்கு அச்சுறுத்தல்! அமெரிக்காவில் பதற்றம்
அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் எதிர்வரும் 20 ஆம் திகதி பதவியேற்பதனை முன்னிட்டு அமெரிக்கா முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றது.
பைடனின் பதவியேற்பு நாளினை முன்னிட்டு ஆயுதமேந்திய போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறையினர் எச்சரித்ததை அடுத்தே இந்தப் பாதுகாப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது.
விஸ்கான்சின், மிச்சிகன், பென்சில்வேனியா மற்றும் அரிசோனா ஆகிய மாநிலங்களின் தலைநகரங்கள் அதிக வன்முறை அபாயங்களை எதிர்நோக்க நேரிடும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
ட்ரம்பின் பரவலான தேர்தல் மோசடி பற்றிய ஆதாரமற்ற ஆதாரங்களுக்கு மேற்கண்ட மாநிலங்கள் மையமாக இருந்தன. அவர் தனது ஆதரவாளர்களை அமைதியின்மையை தூண்டுவதற்குப் பயன்படுத்தினார்.
பைடனின் வெற்றியை உறுதிப்படுத்த காங்கிரஸ் கூடிவந்தபோது அமெரிக்க தலைநகர் கட்டிடத்தையும் தனது ஆதரவாளர்களை கொண்டு தாக்கினார்.
இந்நிலையில் பாதுகாப்பை அதிகரிப்பதற்காக மிச்சிகன் மற்றும் லான்சிங்கில் தலைநகரைச் சுற்றி வேலி அமைக்கப்பட்டுள்ளதுடன், மாநிலம் முழுவதும் இருந்து படையினர் அணி திரட்டப்பட்டுள்ளனர்.
நம்பகமான அச்சுறுத்தல்கள் குறித்த கவலையை சுட்டிக்காட்டி சட்டமன்றம் அடுத்த வார கூட்டங்களை இரத்துச் செய்துள்ளது.
இதற்கிடையில் ஆயிரக்கணக்கான ஆயுதமேந்திய தேசிய காவல்படை வீரர்கள் வொஷிங்டன் கொலம்பியா மாவட்ட வீதிகளில் இறங்கியுள்ளனர்.
நகரத்திற்குள் பாலங்கள் மற்றும் சாலைகள் மூடப்படவுள்ளதுடன், நேஷனல் மால் மற்றும் அமெரிக்காவின் பிற முக்கிய இடங்களுக்குள் நுழைவதற்கும் தடைவிதிக்கப்படவுள்ளது.