தங்கத்திற்கு பதிலாக பித்தளையில் தாலி - கொடி! யாழில் மோசடி : சந்தேக நபர் கைது
தங்கத்திற்கு பதிலாக பித்தளையில் தாலி, மற்றும் கொடி செய்து கொடுத்து மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கடந்த 2016ஆம் ஆண்டு தாலி மற்றும் அதற்கான கொடி என்பவற்றை ஐந்தரை பவுணில் செய்தவற்கு, சந்தேகநபரிடம் பணம் கொடுத்து , தாலி மற்றும் கொடியினை செய்து பெற்றுக்கொண்டுள்ளனர்.
7 வருடங்களின் பின் வெளிவந்த உண்மை
7 வருடங்களின் பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்னரே தமது தாலி மற்றும் கொடி என்பவை தங்கம் அல்ல பித்தளை என்பதனை கண்டறிந்துள்ளனர்.
அது தொடர்பில் தெல்லிப்பளை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், சந்தேக நபர் தலைமறைவாகி இருந்தார்.
இந்நிலையில் காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு காவல்துறை பிரிவினர் தலைமறைவாகி இருந்த சந்தேக நபரை கைது செய்து, மேலதிக விசாரணைக்காக தெல்லிப்பளை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அதேவேளை யாழில் கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் தங்கத்திற்கு பதிலாக பித்தளையில் தாலி மற்றும் கொடி செய்து கொடுத்து ஏமாற்றிய சம்பவம் ஒன்று பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
You may like this
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
