மருத்துவரின் கணவரின் மரணம் - வெளியானது காரணம்
மட்டக்களப்பு வைத்தியசாலையில் கடமையாற்றும் மருத்துவரின் கணவரான பொறியியலாளரின் மரணத்திற்கான காரணம் பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக கஹதுடுவ காவல்துறையினர் தெரிவித்தனர்.
சியம்பலாகொட, பொல்கசோவிட்ட, ஜயலியாகம பிரதேசத்தில் வசித்து வந்த 58 வயதான பி.ஏ.புஷ்பகுமார நிஷங்க என்பவரே உயிரிழந்துள்ளார்.
வீட்டில் தனியாக இருந்த கணவர்
வீட்டில் தனியாக இருந்த கணவரைப் பார்வையிடுமாறு பக்கத்து வீட்டு நபருக்கு மருத்துவர் தொலைபேசியில் அறிவித்ததையடுத்து, அவர் வேறொருவருடன் வந்து பார்வையிட்டபோது, பொறியாளர் வீட்டின் அறையில் இரத்த வெள்ளத்தில் முகம் குப்புறக் கிடந்துள்ளார்.
அதன்பேரில், மவுன்ட் குற்றப் புலனாய்வு ஆய்வக அதிகாரிகள், தடயவியல் மருத்துவ அலுவலர்கள், மவுண்ட் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும் வந்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.
பதில் நீதவானின் உத்தரவு
மரணம் தொடர்பான தகவலை கஹதுடுவ காவல்துறையினர் நீதிமன்றில் அறிவித்ததையடுத்து, வீட்டுக்கு வந்த கெஸ்பேவ நீதிமன்ற பதில் நீதவான் திருமதி ஹேஷா விதானகே, சடலத்தையும் இடத்தையும் பார்வையிட்டு, சடலத்தை பிரேத பரிசோதனை செய்ய களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்க உத்தரவிட்டார்.
அதன்படி, களுபோவில போதனா வைத்தியசாலையின் பிரதம சட்ட வைத்திய நிபுணர் டொக்டர் ஏ.தயாபால பிரேத பரிசோதனையை நடத்தினார்
விசாரணையில், அளவுக்கு அதிகமாக குடிப்பழக்கத்தால், சிரோசிஸ் நோய் தீவிரமடைந்ததால், பொறியாளர் உயிரிழந்தது தெரியவந்ததாக, காவல்துறையினர் தெரிவித்தனர்.
