அதிகரித்த கடன் தொல்லை - கேக் வெட்டி பிறந்நநாள் கொண்டாடி மொத்த குடும்பமும் எடுத்த விபரீத முடிவு
அதிகரித்த கடன் தொல்லை
அதிகரித்த கடன் தொல்லையால் கணவன், மனைவி மற்றும் மகள் என மூவரும் பிறந்தநாள் அன்று ஒட்டுமொத்தமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவர்கள் வசித்த கிராமத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் உள்ள லக்னோ என்ற கிராமத்திலேயே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் கணவரான ஷைலேந்திரகுமார். இவர் மனைவி கீதா. தம்பதியின் மகள் பிரச்சி ஆகிய மூவருமே தற்கொலை செய்து கொண்டவர்களாவர்.
பிறந்தநாளன்று தற்கொலை
ஷைலேந்திரகுமாருக்கு இரு தினங்களுக்கு முன்னர் பிறந்தநாள் நடைபெற்றது. அன்றைய தினம் குடும்பத்துடன் கேக் வெட்டிய ஷைலேந்திரகுமார், கேக் சாப்பிட்ட பின்னர் அவர்களிடம் இனி அடுத்த ஜென்மத்தில் சந்திப்போம் என கூறினார்.
கேக் சாப்பிட்ட சிறிது நேரத்தில் மூவரும் உயிரிழந்தனர், ஏனெனில் கேக்கில் விஷம் கலக்கப்பட்டிருந்தது.
மிரட்டல்,துன்புறுத்தல்
இது தொடர்பான விசாரணையில் கடன் பிரச்சனையால் தவித்து வந்த ஷைலேந்திரகுமார் தொடர்ந்து சிலரால் மிரட்டப்பட்டும், துன்புறுத்தப்பட்டும் வந்திருக்கிறார் என தெரியவந்துள்ளது.
இதையடுத்தே இம்முடிவை அவர் எடுத்துள்ளார். இந்த மரணங்கள் தொடர்பாக காவல்துறையினர் நால்வரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் மேலும் பல தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
